உ.பி. செவிலியர்.. பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை.. உத்தரகாண்டில் வெடித்தது போராட்டம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூத்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படும் என்று எஸ்பி சிட்டி மனோஜ் கத்யாலி கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துப்பட்டாவால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர், தனது 11 வயது மகளுடன் உத்தரப்பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் தங்கி இருந்துள்ளார். அவர் மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு தினமும் வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். ஆனால், ஜூலை 30 ஆம் தேதி மருத்துவமனையில் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய செவிலியர் வீட்டுக்குத் திரும்ப வரவில்லை.
இதையடுத்து, செவிலியரைக் காணவில்லை என அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அப்பெண் காணாமல்போன 8 நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அப்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
இந்நிலையில், செவிலியரின் மொபைல் போன் சிக்னலின் அடிப்படையில் 28 வயதான தர்மேந்திரா என்பவரை போலீஸார் கைது செய்தனர். கூலி தொழிலாளியான தர்மேந்திரா குடிபோதையில் செவிலியரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் வீட்டுக்குள் நுழையும்போது வாயைப் பொத்தி புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மேலும், அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், உத்தரகாண்டில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், எனது சகோதரி ஏற்கனவே விவாகரத்து பெற்று 11 வயது மகளை வளர்க்கப் போராடி வந்தாள். தாய் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் அவரது மகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்கப்படும் என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் மீனா சர்மா கூறுகையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும். நாகரீகமான சமுதாயத்தில் காட்டுமிராண்டித்தனமான நபர்களுக்கு இடமில்லை. என்றார். எஸ்.பி. சிட்டி மனோஜ் கத்யாலி கூறுகையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணை முழுமையாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications