காப்பாத்துங்க மோடி ஜி.. வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில் மாயமான பெண்.. சிக்கலில் பாஜக தலை

பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிற்கு எதிராக புகார் கொடுத்த பெண் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Woman disappeared after posting a video against BJP ex-MP in UP

    லக்னோ: பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிற்கு எதிராக புகார் கொடுத்த பெண் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்தே அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதிகம் ஆகி வருகிறது. அதேபோல் போலீஸ் என்கவுண்டரும் சாதாரண நிகழ்வாக மாறி உள்ளது.

    இந்த நிலையில்தான் தற்போது அங்கு பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் பாஜக முன்னாள் அமைச்சர் மீது புகார் கொடுத்த சில மணி நேரத்தில் அந்த பெண் காணாமல் போய் உள்ளார்.

    யார் கல்லூரி

    யார் கல்லூரி

    லக்னோவில் இருந்து 200 கிமீ தூரத்தில் இருக்கிறது சுவாமி சுக்தேவானந்தா கல்லூரி. இது பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிற்கு சொந்தமான கல்லூரி ஆகும் இது. இந்த கல்லூரியில் படிக்கும் பெண் அந்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.

    என்ன நாசம்

    என்ன நாசம்

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், சனந்த் சமாஜ் அமைப்பை சேர்ந்த பெரிய தலைவர் ஒருவர் பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார். அவர் தற்போது என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். யோகி ஜி, மோடி ஜி பிளீஸ் உதவி செய்யுங்கள், எங்களை காப்பாற்றுங்கள். நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்று தெரியும்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் நான் இனியும் உயிரோடு இருப்பேனா என்று தெரியாது. அந்த சந்நியாசியிடம் போலீசும், நீதிபதிகளும் கட்டுப்பட்டு இருப்பதாக கூறுகிறார். அவரின் பாக்கெட்டில் எல்லோரும் இருப்பதாக சந்நியாசி என்னிடம் கூறுகிறார். ஆனால் அவருக்கு எதிராக எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது, என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

    வைரல்

    வைரல்

    ஆனால் அந்த வீடியோவில் சின்மயானந்தா பெயரை அந்த பெண் நேரடியாக சொல்லவில்லை. இந்த நிலையில் அந்த வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களில் அவர் காணாமல் போய் உள்ளார். நான்கு நாட்கள் ஆகியும் அந்த பெண் எங்கே போனார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசில் அந்த பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

    உதவி

    உதவி

    பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாதான் தன்னுடைய மகளை கடத்தி உள்ளார். அவர் என்னுடைய மகளை கொலை செய்திருக்க கூட வாய்ப்புள்ளது. போலீசார் இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் புகாரில் கூறியுள்ளார்.

    போலீசார் வழக்கு

    போலீசார் வழக்கு

    ஆனால் போலீசார் இதை கடத்தல் வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதேபோல் இதில் சின்மயானந்தா மீதான பாலியல் புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை. கடத்தல் மற்றும் குற்றச்செயல் பிரிவின் கீழ் மட்டும் வழக்கு பதிந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+