சீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு
லக்னோ: சீனா, பாகிஸ்தானுடனான யுத்தம் எப்போது என்பதை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார் என உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லையில் சீனா தொடர்ந்து ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை நமது ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர். அத்துடன் சீனாவுடனான எல்லைகளில் ராணுவம் முழு தயார் நிலையில் இருக்கிறது.

அண்மைக்காலமாக எல்லைப் பகுதிகளில் சீனாவும் ராணுவத்தை பெருமளவு குவித்து வருகிறது. இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகளில் எல்லைகளில் ராணுவ குவிப்பை திரும்பப் பெறுவது என்பது முக்கியமான பிரச்சனையாகவும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா மாநில தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்தது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போன்ற நடவடிக்கைகளைப் போல பாகிஸ்தான், சீனாவுடனான யுத்தம் குறித்தும் பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார். யுத்தத்துக்கான நாளை கூட மோடி தீர்மானித்துவிட்டார் என கூறியிருக்கிறார்.
பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் யாதவ் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்தான் ஸ்வதந்திர தேவ் சிங் இப்படி பேசியுள்ளார். மேலும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தொண்டர்களை பயங்கரவாதிகளாகவும் அவர் சித்தரித்திருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், சிறப்புதான்.. நமது இந்திய நிலப்பகுதியை யார் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதை கூட மோடி சொல்வதில்லை. அப்படியான பெயர் தெரியாத எதிரியுடன் யுத்தத்துக்கு மோடி தயாராகிவிட்டார் என குறிப்பிட்டிருக்கிறார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications