ராம்பூரில் போலீஸார் மீது கல்வீச்சு.. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு
லக்னோ: ராம்பூரில் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டு வீசியதை அடுத்து அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி போலீஸார் அவர்களை கலைத்தனர்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

நேற்று மாலை வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் மாநிலத்தில் பல்வேறு இடங்கள் போராட்டக்காரர்கள் குவிந்தனர். இந்த நிலையில் ராம்பூரில் இன்று மீண்டும் வன்முறை நடந்தது.
Rampur: Police used tear gas shells against protesters after they pelted stones during protest against #CitizenshipAmendmentAct, earlier today. pic.twitter.com/IHF1cYa3OM
— ANI UP (@ANINewsUP) December 21, 2019
போராட்டம் நடைபெறும் இடமான ராம்பூரில் போலீஸார் மீது சிலர் கற்களை வீசினர். அப்போது போலீஸாரும் பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications