இன்னும் 7 நாள் தான் Good Bye பாஜக..Good Bye மோடி! போலி பக்கிரி..உபியில் மோடிக்கு டாடா காட்டிய ராகுல்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரத்தில், பிஜேபியிடம் இருந்து நாடு விடுதலை பெறும், நாட்டுக்கு உண்மையான நல்ல நாட்கள் வரப்போகிறது என பேசிய ராகுல்காந்தி, ஜூன் 4க்கு பிறகு குட் பை பிஜேபி, குட் பை நரேந்திர மோடி, டாடா! என கிண்டல் செய்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று இருக்கும் நிலையில் இன்னும் ஒரு கட்ட தேர்தல் அதாவது கடைசி கட்ட தேர்தல் மீதமுள்ளது

ஜூன் ஒன்றாம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்திய திருநாட்டை அடுத்து ஆளப்போகும் பிரதமர் யார் என்பதை அறிய அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
லோக் சபா தேர்தல்: பாஜகவை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார், 400 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்
வாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் குறிப்பாக கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரமானது சூடு பிடித்திருக்கிறது. லோக்சபா தேர்தல் 2024 கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் எட்டு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் அந்த வகையில் இறுதி கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ராகுல் காந்தி: நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையற்றினார். அப்போது கடும் வெப்ப அலை வீசியதால் அவர் குடிக்கும் தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், ஜூன் 4க்கு பிறகு குட் பை பிஜேபி, குட் பை நரேந்திர மோடி, டாடா!.. பொதுமக்களை ஏமாற்றும் போலி பக்கிரிக்கு இன்னும் ஏழு நாட்களே இருக்கிறது.
விடுதலை: இந்தியா கூட்டணி பொதுமக்களிடமிருந்து வாக்குகளை பெற்று வருகிறது. பிஜேபி இடம் இருந்து நாடு விடுதலை பெறும் நாட்டுக்கு உண்மையான நல்ல நாட்கள் வரப்போகுது.. விரைவில் அதனை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.. மோடி சொன்னது போல் அவர் மற்றவர்களைப் போல பயாலஜிக்கலாக பிறந்த பிறப்பல்ல கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றால் அவரது உழைப்பு மக்களுக்கானதோ உழவர்களுக்கானதோ கிடையாது.
பரமாத்மா: அம்பானி அதானிக்காக மட்டுமே மோடியை கடவுள் அனுப்பியுள்ளார் என கூறுகிறாரா என தெரியவில்லை.. தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் அமலாக்கத்துறை விசாரித்தால் தனது செயல்களுக்கு பரமாத்மா தான் காரணம் எனக் கூறி அவர் தப்பித்து விடுவார்" என பேசினார். இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications