இங்க அவங்கதான் முக்கியம்.. உ.பி பேரணியில் ஒதுங்கி நின்ற ராகுல்.. தனியாக கவனம் ஈர்த்த பிரியங்கா!
உத்தர பிரதேசத்தில் நடக்கும் காங்கிரஸ் பேரணியில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அதிக கவனம் பெற்று இருக்கிறார்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் பேரணியில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அதிக கவனம் பெற்று இருக்கிறார்.
இந்த பேரணி முழுக்க பிரியங்கா காந்திதான் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் முழு நேர அரசியலில் களமிறங்கி இருக்கும் பிரியங்கா காந்தி சார்பாக இன்று உத்தர பிரதேசத்தில் பேரணி நடைபெற்றது.
உத்தர பிரதேச காங்கிரஸ் பிரியங்காவை வரவேற்கும் விதமாக இந்த பேரணியை நடத்தியது. பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தியும், காங்கிரசின் இன்னொரு உத்தர பிரதேச மாநில பொறுப்பாளரான ஜோதிராதித்ய சிந்தியாவும் வந்தனர்.
ராகுல் ஒதுங்கி இருந்தார்
இந்த பேரணியின் சென்டர் ஆப் அட்ராக்சன் பிரியங்கா காந்திதான். காரின் மேல் நின்று பேரணியில் சென்ற இவர்களில் பிரியங்கா காந்தி எல்லோருக்கும் முன் நின்று கொண்டு இருந்தார். ராகுல் காந்தி பிரியங்கா காந்திக்கு பின் பக்கம் ஒதுங்கி இருந்தார். ராகுல், பிரியங்காவை முன்னிறுத்தி பின் பக்கம் மற்ற தலைவர்களுடன் இருந்தார்.
|
கூட்டம் அதிகரித்தது
இந்த பேரணியில் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. முதலில் குறைவான எண்ணிக்கையில் இருந்த கூட்டம் நேரம் செல்ல செல்ல மிக அதிகம் ஆனது. தற்போது பிரியங்காவின் கான்வாய் நகர கூட முடியாத அளவிற்கு பெரிய அளவில் கூட்டம் கூடியுள்ளது.
|
என்ன தோரணை
இந்த பேரணியில் முதலில் நின்று கொண்டு வந்த பிரியங்கா காந்தி, பின் அந்த காரில் மேல் பகுதியிலேயே கம்பிகளுக்கு இடையில் அமர்ந்து கொண்டார். அதிலும் கூட மிகவும் தோரணையாக அமர்ந்து கொண்டு சகஜமாக தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்தார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தியின் பேரணி மொத்தம் 28 இடங்களில் நின்று நின்று சென்று கொண்டு இருக்கிறது. அந்த 28 இடங்களிலும் மக்களை சந்தித்தார். ஆனால் பிரியங்கா காந்தி மக்களிடம் பேசவில்லை. இன்று மாலைக்குள் இந்த பேரணியின் முடிவில் பிரியங்கா காந்தி மக்கள் முன்னிலையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.