மண்டைக்கேறிய அரசு வேலை ஆசை.. பூஜையறையில் சுருண்ட கணவன்.. வாசலில் ஆண் நண்பர்.. ஆடிப்போன உத்தர பிரதேசம்
கான்பூர்: இந்தியாவில் கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன.. முறைதவறும் உறவுகளுக்காக, கட்டிய கணவன், பெற்ற குழந்தைகள், தாலி கட்டிய மனைவி என்ற பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது.. இதற்கு என்ன காரணம்? இது தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ளனர்,. அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த காதல் மனைவி, அவரின் ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் குமார்.. இவர் ஷிவானி என்ற பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தார்.. ஷிவானியும் தீபக் குமாரை விரும்பினார்.. இதையடுத்து இவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.. அதன்படி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிக்கு, 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
அரசு பணியில் தீபக்
ரயில்வே துறையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தவர் தீபக் . இப்போது 29 வயதாகிறது.. எனினும், சிஆர்பிஎஃப்-ல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.. இந்நிலையில், பூஜையறையில் பூஜை செய்துகொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக ஷிவானி உறவினர்களுக்கு போனில் தகவல் சொல்லி கதறி அழுதார்.. இதையடுத்து உறவினர்கள் பதறியடித்து கொண்டு ஓடிவந்தார்கள்..
ஆனால், தீபக்கின் சகோதரர் பியூஸ், தன்னுடைய அண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்தார்.. எனவே, மருத்துவமனையில் தீபக்கின் உடலை, உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று பியூஸ் கோரிக்கை விடுத்தார்.. அப்போது திடீரென ஷிவானி, மருத்துவமனையில் எந்த டெஸ்ட்டும் தன்னுடைய கணவருக்கு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு காட்டினார்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
இதனால், பியூஸுக்கு சந்தேகம் வலுவானது. உடனே தீபக்கின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, போலீசில் புகார் தந்தார்.. அப்போதுதான் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டதில், தீபக்கின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக ரிப்போர்ட் வந்தது..இதையடுத்து, போலீசார் தீபக்கின் மனைவி ஷிவானியை பிடித்து விசாரித்தனர்.. அப்போது வேறு வழியின்றி மொத்த உண்மைகளையும் ஷிவானி போலீசாரிடம் சொன்னார்.
அதாவது, காதலிக்கும்போது, அரசு பணியில் வேலையில் இருந்தார் தீபக்... திருமணமானதுமே, அந்த பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.. இதை ஷிவானி எதிர்பார்க்கவில்லை.. கணவரை கொன்றுவிட்டால், அவரது ரயில்வே பணியை கபளீகரம் செய்து கொள்ளலாம் என்பதே ஷிவானியின் பிளானாக இருந்துள்ளது..
பகீர் வாக்குமூலம்
இதற்காகவே சம்பவத்தன்று, பாலில் தூக்க மாத்திரை கலந்து, கணவனுக்கு தந்துள்ளார்.. அதை குடித்து தீபக் மயங்கியதுமே, அவரது கழுத்தை கொன்றுள்ளார். தன்னுடைய ஆண் நண்பரையும் வீட்டுக்கு வரவழைத்து, இந்த கொலையை அரங்கேற்றியிருக்கிறார் ஷிவானி.. அதுமட்டுமல்ல, தன்னுடைய மாமியாரையும் ஷிவானி கொடுமைப்படுத்தி வந்தாராம்.
இவ்வளவும் போலீசாரிடம் வாக்குமூலமாக தந்ததையடுத்து, ஷிவானியும், அவரது ஆண் நண்பரும் கைதாகி உள்ளனர். அரசு வேலையை கைப்பற்றுவதற்காக காதல் கணவனை, மனைவியே கொலை செய்து, அது இயற்கை மரணம் என்று நாடகமாடியது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications