வீடு வீடாக வாள், கோடரி விநியோகத்தை இந்துத்துவா அமைப்பினர்.. ஷாக் காரணம்.. 6 பேர் அதிரடி கைது
லக்னோ: வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகின்றனர். அதேபோல் இங்கு நடக்ககூடாது என்று கூறி ஹிந்து ரக்சா தளம் என்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் வீடுவீடாக வாள், கோடரியை வழங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு வெடித்த வன்முறையில் 2 இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு நம் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கண்டுக்கொள்ளாமல் உள்ளார்.
மேலும் டெல்லியில் உள்ள வங்கதேசத்தின் தூதரகத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தான் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தி் ஷாலிமார் கார்டன் காலனி உள்ளது. இங்கு ஹிந்து ரக்சா தளம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வாள், கோடரி உள்ளிட்டவற்றை இந்து மக்களுக்கு வழங்கினர்.
இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டும் அவர்கள் வீடு வீடாக சென்று இந்த செயலில் ஈடுபட்டனர். இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் பூபேந்திரா வீடியோ வெளியிட்டுள்ளார். இஸ்லாமியர்களாக பிரச்சனையை எதிர்கொள்ளாமல் இருக்க 250 வீடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதத்தை வைத்து இஸ்லாமியர்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். இந்து மக்களுக்கு ஹிந்து ரக்சா தளம் எப்போதும் துணை நிற்கும்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் கொடூரமானது. அங்கு இந்துக்கள் கொல்லப்பட்டுகின்றனர். வங்கதேசத்தில் இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை போல் இங்கு வந்து விடக்கூடாது. இதனால் வீடு வீடாக ஆயுதங்கள் வழங்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானது.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் ஹிந்து ரக்சா தளம் அமைப்பை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, வாள், கோடரி உள்ளிட்ட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தஅமைப்பின் தலைவர் பூபேந்திரா தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதுபற்றி, போலீஸ் துணை ஆணையர் நிமிஷ் படேல் கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 191(2) (கலவரத்தில் ஈடுபட்ட குற்றம்), 191(3) (கொடிய ஆயுதத்துடனோ அல்லது தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்துதல்), 127(2) (சட்டவிரோதமாக சிறை வைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications