உ.பி:பைனாகுலரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறையை 3 ஷிப்ட் போட்டு அகிலேஷ் வேட்பாளர்கள் கண்காணிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை மூன்று ஷிப்ட் போட்டு கண்காணித்து வருகின்றனர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. உ.பி.யில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று வெளியாகின.

எக்ஸிட் போல் முடிவுகள்
பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக குறைந்தது 100 இடங்களை பறிகொடுக்கும் என்றும் அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. இது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணிக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது.

வாக்குப் பதிவு இயந்திர புகார்கள்
உத்தரப்பிரதேசத்தில் வாக்குப் பதிவுகளின் போதே, அகிலேஷ் யாதவின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரைக்கு வாக்களித்ததாக ஒப்புகைச் சீட்டு காட்டுகிறது என்கிற புகார்கள் வந்தன. ஆனால் தேர்தல் அதிகாரிகள் இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தனர். தமிழகத்தைப் போல வாக்குப் பதிவு இயந்திரங்களை அதற்கான நெறிமுறைகளுடன் கையாளுகிற மாநிலம் பாஜக அல்ல. இதனை எதிர்க்கட்சிகளும் இதுவரை பெரிதாக கையில் எடுத்துக் கொண்டது இல்லை.

பைனாகுலர் மூலம் கண்காணிப்பு
இந்நிலையில் உ.பி.யில் பல இடங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் பிரசார வேனில் ஏறி நின்றபடி பைனாகுலர் மூலமாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்கின்றனர். இது தொடர்பாக ஹஸ்தினாபூர் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மா கூறுகையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். வாக்குப் பதிவு இயந்திரங்களை சுற்றிய நடமாட்டங்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். 8 மணிநேரத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 3 ஷிப்ட் போட்டு பைனாகுலர் மூலம் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து நம்பிக்கை இல்லை. சமாஜ்வாதி கட்சியே உ.பி.யில் ஆட்சி அமைக்கும். அகிலேஷ் யாதவ்தான் மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.

ஜெயந்த் சவுத்ரி விளக்கம்
இதனிடையே அகிலேஷ் யாதவின் கூட்டணி கட்சியான ஆர்.எல்.டி. தலைவர் ஜெயந்த் சவுத்ரி கூறுகையில், எக்ஸிட் போல் முடிவுகள் எப்படி எடுத்தார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்போது எக்ஸிட் போல் வெளியிட்டவர்கள் யாரும் வாக்கு சாவடிகளுக்கு வந்ததும் இல்லை. எக்ஸிட் போல் முடிவுகளும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெவ்வேறானதாகவே இருக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு ஒருவித அச்சத்தால் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதாகவும் பலரும் சொல்லி இருக்கலாம் அல்லவா? என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications