அவர் நல்லா இருந்தால்.. ஆல் இஸ் வெல்.. சிவலிங்கத்துக்கு மாஸ்க்.. உ.பி.யில் கலகல!
Recommended Video
லக்னோ: அவர் நல்லா இருந்தால்தான் நாம் நன்றாக இருப்போம் என சிவலிங்கத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் மாஸ்க் அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காற்று மாசை குறைக்க டெல்லியில் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள், பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோர் முகமூடி அணிந்து கொள்கின்றனர். டெல்லியில் உள்ள பாதிப்பு அண்டைய மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது.

வாரணாசி
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள தர்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு மாஸ்க் அணிவித்துள்ளனர்.

பூஜை
அது போல் மற்ற சுவாமி சிலைகளுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கோயில் பூசாரிகளும் மாஸ்க் அணிந்து கொண்டே பூஜை செய்கின்றனர்.

நலமாக
இதுகுறித்து பூசாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் வாரணாசியில் காற்று மாசு அதிகமாக உள்ளது. இந்த மாசான காற்றிலிருந்து சிவபெருமானை காக்கவே மாஸ்க் எனப்படும் முகமூடி அணிவித்திருக்கிறோம். அவர் நன்றாக இருந்தால்தானே நாம் நலமாக இருக்க முடியும் என்றனர்.

திருவிழாவில் புதிய ஆடை
அது போல் சிக்ரா பகுதியில் உல்ள சிவன் பார்வதி கோயிலில் சிவா, துர்க்கை, காளி, சாய்பாபா ஆகிய சுவாமி சிலைகளுக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்குள்ள பூசாரிகளிடம் கேட்ட போது மழை காலத்தில் கம்பளி போன்ற ஆடைகளை சுவாமிகளுக்கு போர்த்துகிறோம். அது போல் திருவிழா காலங்களில் புதிய ஆடையை அணிவிக்கிறோம்.
|
சுவாமி சிலைகள்
அவ்வாறிருக்கும் போது காற்று மாசை தடுக்க ஏன் மாஸ்க் அணியக் கூடாது? வாரணாசி என்பது நம்பிக்கைக்குரிய இடமாகும். சுவாமி சிலைகள் உயிருள்ளவையாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே நாங்கள் சில கஷ்டங்களை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications