Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நொய்டா கட்டிட இடிப்பு.. "எல்லாம் போச்சு".. ஒப்புதல்களை பெற்றுத்தானே கட்டினோம்.. புலம்பும் ஓனர்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் இரண்டு பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் சற்று நேரத்திற்கு முன்னர் தகர்க்கப்பட்ட நிலையில், இந்த கட்டிடங்களை கட்டிய 'சூப்பர்டெக்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தலைவர் ஆர்.கே.அரோரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Supertech says Noida Authority approved twin towers construction plan

விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து இந்த கட்டிடம் இன்று இடிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிட இடிப்புக்கு பின்னர் தேங்கும் 35,000 கன மீட்டர் இடிபாடுகள் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு சவாலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றாண்டுகளாக கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள் தற்போது 9 விநாடிகளில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 40 தளங்களை கொண்டுள்ளது. ஆனால் இது பசுமையான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதை கட்டியதில் விதி மீறல்கள் அதிக அளவில் நடந்துள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் குடியிருப்பு வாசிகளால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2012ல்) வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிலபல பாதுகாப்பு காரணங்களுக்காக ஓராண்டாக இந்த இடிப்பு தள்ளிப்போய் தற்போது ஒருவழியாக இடித்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டிடம் இடிப்பு குறித்து இதனை கட்டியெழுப்பிய 'சூப்பர்டெக்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தலைவர் ஆர்.கே.அரோரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "கடந்த 2009ல் அப்போதைய மாநில அரசாங்க விதிகளின் ஒப்புதலுக்கு இணங்க இந்த அபெக்ஸ் மற்றும் செயேன் எனும் இரண்டு கட்டிடங்கள் நொய்டாவில் கட்டப்பட்டன. நொய்டா மாநகராட்சி சார்பில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என அரோரா கூறியுள்ளார். அதேபோல இந்த கட்டிட இடிப்புகள் இந்நிறுவனத்தின் இதர கட்டுமான பணிகளை ஒருபோதும் பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த கட்டுமான திட்டத்தில் எவ்வித மாற்றங்களும் திருத்தங்களும் செய்யப்படவில்லையென்றும், கட்டுமானம் தொடர்பான ஆணையத்திடம் முழு பணத்தையும் கொடுத்த பின்னரே கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும் தொழில்நுட்ப அடிப்படையில் கட்டுமானம் திருப்திகரமாக இருப்பதாகக் கண்டறியாததையடுத்து நீதிமன்றம் இதனை இடிக்க உத்தரவிட்டுள்ளது. இதுவரை நாங்கள் 70,000க்கும் அதிகமான கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளோம்.

இன்னும் நிறையபேருக்கு கட்டிடங்கள் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. இது ஏற்கெனவே திட்டமிட்டபடி சரியாக கட்டி கொடுக்கப்படும். தற்போது வெளியான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேறு யாரையும் பாதிக்காது. மேலும் அதிகமான கட்டுமானகளை கட்டி கொடுக்கவும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என அரோரா தனது அறிக்கையில் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து சூப்பர்டெக் நிறுவனத்தின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில் இந்த அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+