சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டம்! அசத்தும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் உள்ள 75 மாவட்டங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSMEs) 15 நாள் பதிவு பிரச்சாரத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தொடங்கி வைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலசைம்சராக பொறுப்பு வகித்திருந்தவார்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை.

இந்நிலையில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் நோக்கி நகர்த்த யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். இதற்காக பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியையும் கண்காணிக்கவும், அதில் தேக்கம் ஏற்பட்டால் அதை சரிசெய்யவும் புதிய யோசனை ஒன்றை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களை பதிவு செய்ய போர்ட்டல் ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது.
தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தில்தான் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 90 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், ஆனால் இதில் வெறும் 14 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் சரியாக சென்று சேர்வதில்லை என்றும், இதனால் மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி பாதிக்கப்படலாம் எனவும் மாநில அரசு கூறியுள்ளது.
எனவே இந்த எம்எஸ்எம்இகளை ஒன்றிணைக்க இதுபோன்ற இந்த போர்டல் உதவும் என்பதால் இதில் எம்எஸ்எம்இ நிறுவனங்களை பதிவு செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 75 மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் 15 நாட்கள் வரை முகாம்கள் செயல்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications