பச்சிளம் குழந்தை எறும்பு கடித்து பலி “மருத்துவமனை அலட்சியமே காரணம்” - பகீர் புகார்.. உ.பியில் அவலம்!
லக்னோ : உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எறும்பு கடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் அலட்சியமே குழந்தையின் இறப்பிற்குக் காரணம் எனக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பச்சிளம் குழந்தையின் இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர்கள், மருத்துவர் தங்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தை
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள முதாரி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார். இவர் மே 30ஆம் தேதியன்று தனது கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மஹோபாவில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தைப் பிறப்பிற்காகச் சென்றுள்ளார். அவருக்கு, மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

எறும்புகள் மொய்த்ததால்
பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, மருத்துவர்கள் குழந்தையை பிறந்த குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் அனுமதித்தனர். குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் சுகாதாரம் இன்றி இருப்பதோடு எறும்புகளும் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பலி
ஆனால் அவர்களின் புகார் மீது மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலட்சியமே காரணம்
பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை இறந்ததற்கு, எறும்பு கடித்ததே காரணம் என்றும், குழந்தையின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் மருத்துவர் அவர்களிடம் ரூ.6,500 லஞ்சம் வாங்கியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த கோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications