உ.பி: 3-ம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 20-ந் தேதி நடைபெறும் தேர்தலில் பாஜகவுக்கு ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் பெரும் சவாலாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3-வது கட்டமாக வரும் 20-ந் தேதி மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 16 மாவட்டங்களில் இந்த 59 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

யாதவ்கள் அதிகம் உள்ள தொகுதிகள்
3-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 16 மாவட்டங்களில் 9-ல் அகிலேஷின் யாதவ் ஜாதியினர் பெரும்பான்மையினராக உள்ளனர். வாசனை திரவிய வியாபாரிகள் ஐடி சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனை என எதிர்கொண்ட கன்னோஜ் தொகுதியில் 3-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஹத்ராஸ் சம்பவம்
இந்த 3-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரத்தில் உ.பி.யின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எழுப்பி வருகிறார். குறிப்பாக 2020-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் குறித்து இடைவிடாமல் பிரசாரம் செய்கிறார் அகிலேஷ். 2020-ம் ஆண்டு பழங்குடி இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. இதனால் அப்பெண் மரணம் அடைந்தார். போலீசார் பெற்றோர், உறவினர்களுக்கு அனுமதி தராமல் தாங்களே அந்த இளம்பெண்ணின் உடலையும் எரித்தனர். இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்கு இந்த ஒரு சம்பவம் முக்கிய காரணமாக இருந்தது.

பதிலடி தரும் யோகி
அகிலேஷ் யாதவ் தமது தேர்தல் பிரசாரத்தில் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம், கன்னோஜ் ஐடி ரெய்டு ஆகியவற்றை முன்வைக்கிறார். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பதிலடி கொடுத்து வருகிறார். இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறுகையில், சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்தது; நில அபகரிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. மாஃபியாக்கள் சுதந்திரமாக நடமாடினர். இத்தனையையும் பாஜக ஆட்சிதான் ஒழித்து கட்டியது என்றார்.

உருளைகிழங்கு விவகாரம்
உ.பி.யில் குற்றச் செயல்கள் அதிகம் நிகழக் கூடிய மாவட்டங்களான ஜான்சி, லலித்பூர், ஹமிர்பூர், மஹோபா ஆகியவை வரும் 20-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன. 3-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் மாவட்டங்களில் உருளைக்கிழங்கு சாகுபடிதான் பிரதானம். உ.பி. உருளை கிழங்குகளை வாங்கப் போவது இல்லை என தெலுங்கானா அரசு அறிவித்திருந்தது. தெலுங்கானா அரசுடன் யோகி அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்ததை அகிலேஷ் விமர்சித்து வருகிறார். ஆகையால் உருளைக்கிழங்கு விவகாரமும் 3-ம் கட்ட தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications