உ.பி: கொள்ளைபோகும் தக்காளி! Special Tomato Force தான் வழி! அட்வைஸ் செய்யும் அகிலேஷ் யாதவ்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தக்காளி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக் தக்காளி பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படையை சிறப்பு தக்காளி படையாக மாற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் தக்காளி விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வட இந்திய மாநிலங்களில் தக்காளி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் பெரும் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் தக்காளி விற்பனை செய்பவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

UP: Akhilesh Yadav suggests to rename STF to Special Tomato Force

இதனால் சமாஜ்வாதி கட்சி தொண்டர் ஒருவர் தக்காளி கடைக்கு பவுன்சர்களை நியமித்தது பெரும் சர்ச்சையானது. தக்காளி விற்பனைக்கு பவுன்சர்களை நியமித்தது தவறு; பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடியது என சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் காய்கறி கடைகளில் 26 கிலோ தக்காளி, 25 கிளோ மிளகாய், 8 கிலோ இஞ்சி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களான நயீம் கான், ராம்ஜி இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் தக்காளி கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

UP: Akhilesh Yadav suggests to rename STF to Special Tomato Force

இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தக்காளி விற்பனைக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்பு அதிரடிப் படை Special Task Force' என்பதை சிறப்பு தக்காளி படையாக "Special Tomato Force " ஆக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+