உத்தரப் பிரதேசத்தில் நிறைவடைந்த 2ஆம் கட்ட தேர்தல்! அமைதியான முறையில் நடந்து முடிந்தது
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலம் உ.பி.தான். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த 55 தொகுதிகளில் பாஜக 38 இடங்களிலும் சமாஜ்வாதி 13 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் தலா இரு இடங்களிலும் வென்றது.

இந்த நிலையில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இதனால் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் முதற்கட்டமாக கடந்த 10ஆம் தேதி 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் இந்த 58 தொகுதிகளில் அடங்கும். முதற்கட்ட தேர்தலில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் இன்றைய தினம் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, பாடான், பரேலி, ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 தொகுதிகள் உள்ளன. இதில் தனித்தொகுதிகள் 9.
இந்த 586 வேட்பாளர்களில் 5 பேர் அமைச்சர்கள். இதில் ஷாஜஹான்பூரில் பாஜக சார்பில் தற்போது அமைச்சராக உள்ள சுரேஷ்குமார் கன்னா போட்டியிடுகிறார். அது போல் சந்தாசியில் அமைச்சர் குலாப் தேவி போட்டியிடுகிறார். அது போல் பாடானில் அமைச்சர் மகேஷ் சந்திர குப்தாவும், பஹேரியில் அமைச்சர் சத்ரபால் காங்வாரும் போட்டியிடுகிறார்கள்.
இத்தேர்தலில் மொத்தம் 2,01,42,441 பேர் வாக்காளர்கள். இவர்களில் 1,07,61,476 பேர் ஆண் வாக்காளர்கள். 93,79,704 பேர் பெண் வாக்காளர்கள். 1,261 பேர் மூன்றாம் பாலினத்தவர். பாஜக தலைமையில் ஜாதிய கட்சிகளும் சமாஜ்வாதியுடன், லோக்தளம் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் காண்கிறது. இந்த முறை ஓவைசியின் கட்சியும் போட்டியிடுகிறது.
9 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 9.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Recommended Video
11 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 23% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 39.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 51.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications