உத்தரப் பிரதேசத்தில் நிறைவடைந்த 2ஆம் கட்ட தேர்தல்! அமைதியான முறையில் நடந்து முடிந்தது
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலம் உ.பி.தான். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த 55 தொகுதிகளில் பாஜக 38 இடங்களிலும் சமாஜ்வாதி 13 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் தலா இரு இடங்களிலும் வென்றது.

இந்த நிலையில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இதனால் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் முதற்கட்டமாக கடந்த 10ஆம் தேதி 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் இந்த 58 தொகுதிகளில் அடங்கும். முதற்கட்ட தேர்தலில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் இன்றைய தினம் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, பாடான், பரேலி, ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 தொகுதிகள் உள்ளன. இதில் தனித்தொகுதிகள் 9.
இந்த 586 வேட்பாளர்களில் 5 பேர் அமைச்சர்கள். இதில் ஷாஜஹான்பூரில் பாஜக சார்பில் தற்போது அமைச்சராக உள்ள சுரேஷ்குமார் கன்னா போட்டியிடுகிறார். அது போல் சந்தாசியில் அமைச்சர் குலாப் தேவி போட்டியிடுகிறார். அது போல் பாடானில் அமைச்சர் மகேஷ் சந்திர குப்தாவும், பஹேரியில் அமைச்சர் சத்ரபால் காங்வாரும் போட்டியிடுகிறார்கள்.
இத்தேர்தலில் மொத்தம் 2,01,42,441 பேர் வாக்காளர்கள். இவர்களில் 1,07,61,476 பேர் ஆண் வாக்காளர்கள். 93,79,704 பேர் பெண் வாக்காளர்கள். 1,261 பேர் மூன்றாம் பாலினத்தவர். பாஜக தலைமையில் ஜாதிய கட்சிகளும் சமாஜ்வாதியுடன், லோக்தளம் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் காண்கிறது. இந்த முறை ஓவைசியின் கட்சியும் போட்டியிடுகிறது.
9 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 9.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Recommended Video
11 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 23% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 39.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 51.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications