உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி? உயிர்த்தெழுமா காங்கிரஸ்?
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. அதேநேரத்தில் பிரியங்கா காந்திதான் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) ஆட்சியைத் தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளது.
ஆனால் பா.ஜ.க. அரசு மீதான அதிருப்தியை அறுவடை செய்து மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் சமாஜ்வாதி கட்சி கவனமாக காய்நகர்த்துகிறது. இதற்கான கூட்டணிகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

போராடும் காங்கிரஸ்
அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியும் இழந்த செல்வாக்கை எப்படியாவது மீண்டும் பெற முடியுமா என பார்க்கிறது. இந்த 3 கட்சிகளுக்குப் பின்னால் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது உ.பி. இப்போது சிங்கிள் டிஜிட் இடங்களுக்கே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

முதல்வர் வேட்பாளராக பிரியங்கா?
காங்கிரஸின் பாரம்பரிய தொகுதிகள் பலவும் பாஜகவின் கோட்டைகளாகவே மாறிப் போய்விட்டன. இதனால் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பித்தாக வேண்டிய நெருக்கடி இருக்கிறது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியை முன்னிறுத்தினாலாவது கட்சியை உயிர்ப்பிக்க முடியுமா? என்கிற கருத்து பரவலாக அக்கட்சியில் இருக்கிறது.

பிரியங்கா தலைமையில் தேர்தல்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், உ.பி. தேர்தலில் பிரியங்கா காந்தி தலைமையில்தான் காங்கிரஸ் களம் காணப் போகிறது. அதேநேரத்தில் முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவது என்பது பிரியங்கா காந்தியின் கையில்தான் உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்து பிரியங்கா காந்திதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார். மேலும் உ.பி. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார். அதனால் புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டியது இல்லை. தற்போதைய மாநில தலைமை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து வந்து உ.பி. காங்கிரஸை வழிநடத்துவதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை என்றும் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.

தேசிய தலைவராக ராகுல்- தீர்மானம்
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் சமூக ஊடகங்கள் பிரிவு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இதேபோன்ற ஒருதீர்மானத்தை ஏற்கனவே டெல்லி பிரதேச மகிளா காங்கிரஸ் பிரிவும் நிறைவேற்றி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக சோனியா காந்திதான் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். தேசிய கட்சிக்கு ஒரு நிரந்தர தலைவரை போட முடியாத சூழ்நிலை பல்வேறு விமர்சனங்களை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications