உ.பி.யில் 100 தொகுதிகளில் போட்டி- ஓம் பிரகாஷ் ராஜ்பார் கட்சியுடன் மட்டுமே கூட்டணி-ஓவைசி திட்டவட்டம்
ல்க்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என்றும் ஓம் பிரகாஷ் ராஜ்பார் தலைமையிலான கூட்டணியில் தங்களது மஜ்லிஸ் கட்சி இடம் பெறும் என்றும் அதன் தலைவர் ஓவைசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
உ.பி.யில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கட்சியிலும் பொதுமக்களிடத்திலும் அதிருப்தி இருக்கிறது. இதனால் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக யோகி மீண்டும் முன்னிறுத்தப்படமாட்டார் என்றே கூறப்படுகிறது.

மாயாவதி கட்சியில் பிளவு
பிற மாநிலங்களைப் போல எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு தொடக்கத்திலேயே தகர்ந்துவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு தாவியதால் இந்த கூட்டணி அமையவில்லை.

தனித்தே போட்டி- மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். முன்னதாக ஓவைசி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் மாயாவதி இதனை நிராகரித்துவிட்டார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடு.

உ.பி. தேர்தலில் ஓவைசி கட்சி
இதனிடையே பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்து வாக்குகளைப் பிரித்த ஓவைசி கட்சி உ.பி.யில் 100 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பீகாரில் 5 இடங்களில் வென்றதைப் போல உ.பி.யிலும் செல்வாக்கை காட்ட ஓவைசி கட்சி முயற்சிக்கிறது.

100 தொகுதிகளில் போட்டி
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஓவைசி, ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் எஸ்.பி.எஸ்.பி கட்சியுடன் மட்டுமே கூட்டணி; பிற கட்சிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் 100 தொகுதிகளில் தமது கட்சி போட்டியிடும்; வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என்றும் ஓவைசி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

3-வது அணி
ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் எஸ்.பி.எஸ்.பி கட்சியானது, பாபு சிங் குஷாவா தலைமையிலான ஜேஏபி, பாபு ராம்பால் தலைமையிலான ஆர்யுபி, பிரேம்சந்திர பிரஜாபதியின் ஆர்.யு.எஸ்.பி, அனில் சிங் சவுகானின் ஜே.கே.பி. ஆகிய கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த அணியில் ஓவைசி கட்சி 100 இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications