உ.பி.யில் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ. ! போலீசார் வழக்கு பதிவு
லக்னோ: உத்தர்ரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ரவீந்தரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 40வயது பெண் ஒருவர் அண்மையில் போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் 2017-ம் ஆண்டு படோஹி தொகுதி எம்.எல்.ஏ. ரவீந்தரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் ஹோட்டல் அறை ஒன்றில் அடைத்து வைத்து 1 மாதமாக பலாத்காரம் செய்தனர் என கூறியிருந்தார்.

இதனால் தாம் கர்ப்பமானதாகவும் பின்னர் அதை கட்டாயப்படுத்தி கலைத்தனர் என்றும் அப்பெண் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான ஆதாரங்களையும் அவர் போலீசிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் பாஜக எம்.எல்.ஏ. விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே உ.பி.யில் பலாத்கார வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கர் சிக்கி சிறையிலடைக்கப்ப்ட்டார். அவர் பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications