உ.பியில் 1.75 கோடி குடும்பத்தினருக்கு இலவச கேஸ் சிலிண்டர் அளித்த யோகி.. மற்றுமொறு மேஜர் அறிவிப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தீபாவளி பரிசாக 1.75 கோடி பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் அளிக்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத் தொடங்கி வைத்தார். ஹோலி பண்டிகையின் போது இதேபோல கேஸ் சிலிண்டரை மக்கள் இலவசமாக நிரப்பிக் கொள்ளலாம் எனவும் யோகி அறிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் 1.75 கோடி குடும்பத்தினருக்கு தீபாவளி பரிசாக இலவசமாக கேஸ் சிலிண்டர் அளிக்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். பிரதான் மந்திரி உஜ்வான் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்பத்தினருக்கு இலவசமாக கேஸ் சிலிண்டரை நிரப்பிக்கொள்ள முடியும் என்று அறிவித்த யோகி ஆதித்யநாத், ஹோலி பண்டிகையின் போது இதே போன்ற பரிசு, அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகள் கண்டிப்பாக தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்க வேண்டும். தீபாவளி பரிசாக மக்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் நிரப்பிக் கொள்ளும் இந்த திட்டத்திற்காக, உத்தர் பிரதேச அரசு ரூ.2,312 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-
கடந்த 2022 ஆம் ஆண்டு லோக் கல்யாண் சங்கல்ப யாத்திரையின் போது அளித்த மற்றுமொறு வாக்குறுதியை தனது அரசு நிறைவேற்றியுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்களுக்கு கேஸ் இணைப்பை பெற முடியாத சூழல் இருந்தது. எரிவாயு இணைப்பு கிடைத்தாலும் கூட சிலிண்டரை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. பல நேரங்களில் போலீசார் காத்திருந்த மக்கள் மீது தடியடி கூட நடத்திய நிலை இருந்தது.
ஏழை மக்கள் கேஸ் சிலிண்டரை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைதான் இருந்தது. விறகு அடுப்பால் ஏற்படும் புகையால் பல நோய்களுக்கும் ஆட்பட்டனர். ஆனால், பிரதமர் மோடி உஜ்வாலா திட்டத்தை தொடங்கிய 2016 ஆம் ஆண்டு நாட்டில் எரிவாயு உருளைக்கு நிலவிய தட்டுப்பாடு தீர்ந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications