கோரக்பூரில் உ.பி. முதல்வர் யோகி வழிபாடு- பெங்களூருவில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட்டனர்!
லக்னோ: நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேசம் கோரக்நாத் ஆலயத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார்.
கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை இன்று முதல் திறக்கவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபட்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் ஆலயத்தில் இன்று காலை முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து வழிபட்டார். உ.பி.யின் சம்பாலில் சாமுண்டா கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட்டனர். லக்னோ யாகியாகஞ்ச் குருத்வாராவிலும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
டெல்லியில் ஜமா மசூதி இன்று காலை திறக்கப்பட்டது. டெல்லி கெளரிசங்கர் கோவில், ஜன்தேவாலன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வழிபட்டனர்.
Recommended Video
கர்நாடகாவிலும் இன்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. பெங்களூரு பசவன்குடியில் உள்ள ஶ்ரீ தொட்ட கணபதி கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசைகளில் நின்று வழிபட்டனர்.
புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் வழிபாடு..