அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெளியேற்றம்.. உ.பி. போலீஸ்
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் இன்று வெளியேற்றப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர் என உத்தரப்பிரதேச மாநில போலீஸார் தெரிவித்தனர்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று டெல்லியில் ஜந்தர் மந்தரில் மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதையடுத்து ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது போல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் மீது நேற்றைய தினம் போலீஸார் தடியடி நடத்தினர். மேலும் இன்றைய தினம் மாணவர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பவுள்ளோம்.
போலீஸார் வன்முறையில் ஈடுபட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார். அலிகாரில் தெருக்களில் இருந்த மோட்டார் சைக்கிள்களை போலீஸ் அடித்து நொறுக்குவது போன்று வீடியோ வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications