சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்வியா.. தேர்தல் அதிகாரியை அடித்து துவம்சம் செய்த உ.பி. பாஜகவினர்
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு சொன்னதாக தேர்தல் அதிகாரியை பாஜக தொண்டர்கள் அடித்து துவம்சம் செய்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் மக்களவை தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளம், கர்நாடகம், கோவா, ஒடிசா, சத்தீஸ்கர், அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு வாக்குச்சாவடி பூத் எண் 231இல் இருந்த தேர்தல் அதிகாரி ஒருவர், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வாக்களிக்க வந்த மக்களிடம் கூறினாராம்.
#WATCH Moradabad: BJP workers beat an Election Official at booth number 231 alleging he was asking voters to press the 'cycle' symbol of Samajwadi party pic.twitter.com/FokdXCAJ1z
— ANI UP (@ANINewsUP) 23 April 2019
இதுபற்றி தகவல் பரவவே, பாஜக தொண்டர்கள் வரை பிடித்து சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விலக்கிவிட முயன்றனர். எனினும் தேர்தல் அதிகாரியை அவர்கள் தொடர்ந்து தாக்கிய வண்ணம் இருந்தனர். இதனால் மொராதாபாத் வாக்குச்சாவடியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications