டெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு!
லக்னோ: குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர்கள் பேரணியில் உத்தரபிரதேசத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஜாட் சமூக அமைப்பு சார்பில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் 84 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேளாண் சட்டத்தை கண்டித்து குடியரசு தினம் அன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்கள் கொண்டு பிரமாண்ட பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்தது.

அதிரடி உத்தரவு
3 வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

டிராக்டர்கள் பேரணி
குடியரசு தினம் அன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்கள் கொண்டு பிரமாண்ட பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு வந்து பேரணியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கடும் கோபத்தில் உள்ள உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லி குடியரசு தின பேரணியில் பங்கேற்க தற்போதே தயாராகி வருகின்றனர்.

உத்தரபிரதேச விவசாயிகள்
மேற்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிசாலி பகுதியில் முசாபர்பூர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களின் 84 கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாட் சமூக அமைப்பு சார்பில் பஞ்சாயத்து கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க தலைவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் மாநிலத்தில் இருந்து பெருவாரியான விவசாயிகள் டிராக்டர் பேரணியில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.

மாவட்டடம் வாரியாக டிராக்டர்கள்
ஷாம்லிக்கு அருகிலுள்ள பனாட் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,000-1,200 டிராக்டர்கள் செல்லும் எனவும் ஒவ்வொன்றிலும் 25 பேர் செல்வார்கள் என்றும் அங்குள்ள ஜாட் சமூக தலைவர் கூறினார். பாக்பத் மாவட்டத்தில் உள்ள 84 கிராமங்களைச் சேர்ந்த தலைவரான சஞ்சீவ் சவுத்ரி என்பவர் தனது மாவட்டத்திலிருந்து 2,000-2,200 டிராக்டர்கள் செல்லும் என கூறியுள்ளார். முன்னதாக குடியரசு தின ஒத்திகையாக அங்கு விவசாயிகள் 1500 டிராக்டர்களுடன் பேரணி ஒத்திகை செய்து பார்த்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications