Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயோத்தி: ரூ50 லட்சம் மதிப்பிலான 3,836 விளக்குகளை 'ஆட்டைய' போட்டது யாரு?தேடும் 'ராமஜென்மபூமி' போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ரூ50 லட்சம் மதிப்பிலான 3,836 அலங்கார விளக்குகள் திருட்டு போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள அயோத்தி ராமஜென்மபூமி போலீசார் இத்தனை ஆயிரம் அலங்கார விளக்குகளை மொத்தமாக 'கொள்ளையடித்து' சென்ற கும்பல் எது? என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்தது. இந்த இடத்தில்தான் கடவுள் ராமர் பிறந்தார் என கூறி 1992-ல் பாபர் மசூதியை இந்துத்துவா அமைப்பினர் இடித்து தகர்த்து தரைமட்டமாக்கினர். இதனால் நாடு முழுவதும் மத வன்முறைகள் வெடித்து ரத்த ஆறு ஓடியது.

ayodhya crime

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோவில் கட்ட ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனடிப்படையில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த அயோத்தி ராமர் கோவிலை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்ட போதும் புறக்கணித்தனர்.

அண்மையில் அயோத்தி ராமர் கோவிலின் மேற்கூரை ஒழுகியதும் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில்தான் அயோத்தி ராமர் கோவிலுக்கான ராமர் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ரூ50 லட்சம் மதிப்பிலான அலங்கார விளக்குகள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் ராமர் பாதையில் 6,000-க்கும் அதிகமான மூங்கில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை இயக்க புரஜெக்டர்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 3,836 அலங்கார விளக்குகள் திருடப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த விளக்குகளை இயக்குவதற்கான புரஜெக்டர்களும் திருட்டு போயிருக்கின்றன. திருட்டு போன அலங்கார் விளக்குகள் ரூ50 லட்சம் மதிப்பிலானவையாம்.

இந்த திருட்டு தொடர்பாக அயோத்தி ராமஜென்மபூமி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இத்திருட்டு தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+