பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தா என் கட்சியையே குளோஸ் பண்ணிடுவீங்க... அமித்ஷாவுக்கு ஜெயந்த் சவுத்ரி பதிலடி
லக்னோ: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ராஷ்டிரிய லோக் தள் கட்சியையே அழித்துவிடுவீர்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை இத்தேர்தல் நடைபெறும். மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேற்கு உ.பி. நிலவரம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர்கள் பட்டாளத்தையே இறக்கியுள்ளது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட்-முஸ்லிம்கள் இணைந்து நிற்பதால் சமாஜ்வாதி கட்சி- ராஷ்டிரிய லோக்தள் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்குகள் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. மேற்கு உ.பி.யில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஜாட் தலைவர்களுடன் சந்திப்பு
இதனையடுத்தே ஜாட் சமூகத் தலைவர்களை அமித்ஷா அழைத்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜாட்களின் கட்சியான ராஷ்டிரிய லோக் தள் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, பாஜக அணியில் சேருவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அமித்ஷாவின் அழைப்பை ஜெயந்த் சவுத்ரி நிராகரித்துள்ளார்.

அமித்ஷா அழைப்பு நிராகரிப்பு
இது தொடர்பாக ஜெயந்த் சவுத்ரி கூறியதாவது; எந்த ஒரு காலத்திலும் நான் பாஜகவில் சேர மாட்டேன். பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் கூட எங்கள் கட்சியையே இல்லாமலேயே ஆக்கிவிடுவர். அமித்ஷா எங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இத்தகைய அழைப்பை ஓராண்டு கால டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாய குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ஜாட்களை உ.பி.யில் அமித்ஷா தனிமைப்படுத்த முயற்சிக்கிறார். ஒரு காலத்திலும் இது நடக்காது. இவ்வாறு ஜெயந்த் சவுத்ரி கூறினார்.
Recommended Video

கள நிலவரம் என்ன?
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் சமாஜ்வாதி கட்சி-ராஷ்டிரிய லோக் தள் கூட்டணி கடும் போட்டியை களத்தில் உருவாக்கும் என்பதையும் அந்த கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் ஜாட்கள், முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஒருங்கிணைந்து நிற்பதால் உ.பி. தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்புகள் தலைகீழாக மாறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications