உ.பி.யில் வேகமெடுக்கும் நகரமயமாக்கல் திட்டம்.. பல ஆயிரம் கோடி செலவில் பணிகள் மும்முரம்.. யோகி அதிரடி
அடுத்த ஒருசில ஆண்டுகளுக்குள் உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மெட்ரோ ரயில்கள், மின்சார பேருந்துகள் போன்ற நவீன போக்குவரத்து வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமீபகாலமாக வளர்ச்சித் திட்டப்பணிகள் வேகம் எடுத்து வரும் நிலையில், நகரமயமாக்கல் திட்டம் அங்கு முழுவீச்சில் நடைபெற தொடங்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தை இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றுவேன் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, உபியில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உள்கட்டமைப்புக்கும், கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்களில் உபி அரசு கவனம் செலுத்தி வருகிறது.

எனவேதான், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டிலும் மற்ற அனைத்து துறைகளை காட்டிலும் கல்விக்கும், வளர்ச்சி திட்டங்களுக்குமே அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் ஒருபகுதியாக, மெட்ரோ ரயில், புதிய சாலைகள், சாலை விரிவாக்கம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டும் ரூ. 55,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளே அதன் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி, அடுத்த ஒருசில ஆண்டுகளுக்குள் உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மெட்ரோ ரயில்கள், மின்சார பேருந்துகள் போன்ற நவீன போக்குவரத்து வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, மாநிலத்தில் உள்ள முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையிலான சாலைகள், எக்ஸ்பிரஸ் வே சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், புதிய விமான நிலையங்கள் துறைமுகங்கள், ஏற்றுமதி - இறக்குமதி மையங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உள்கட்டமைப்புத் திட்டத்தின் ஒருபகுதியாக, தற்போது நகரமயமாக்கலுக்கான பணிகளில் உபி அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. உபியல் உள்ள பல நகரங்களை மேம்படுத்துவதற்காகவும், சில ஊரக பகுதிகளை நகரமயமாக்குவதற்காகவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வரைவு அறிக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை பரிசீலித்துவிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இந்தியாவே கடந்த 6 ஆண்டுகளாக நகரமயமாக்கலை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அந்த வகையில், நகரமயமாக்கலை நோக்கி நாமும் செல்ல வேண்டியது அவசியம். உத்தரபிரதேசத்தில் புதிதாக உருவாகும் நகரங்களில் அனைத்து நவீன வசதிகளும் இருக்க வேண்டும். பூங்காக்கள், போக்குவரத்து வசதிகள், போதிய எண்ணிக்கையிலான காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என அனைத்து வசதிகளும் இருக்கும்படி நகரங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும். இதற்காக ரூ.2000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது" என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications