Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛எப்படி நசுக்குறாங்க’’.. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை புகழ்ந்த யோகி ஆதித்யநாத்.. என்ன சொன்னார்?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: காசா மீதான இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தி வருவதை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டி பேசியுள்ளார். தாலிபானி மனநிலையை இஸ்ரேல் நசுக்குவதாக அவர் புகழ்ந்துள்ளார்.

கடந்த மாதம் அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர். 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர்.

Uttar Pradesh CM Yogi Adityanath praises Israel attacks on Gaza against Hamas

மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் இறந்தனர். மேலும் 230 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர்.

இதையடுத்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி விட்டதாக கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். அதோடு காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் 4வது வாரமாக நீடித்து வருகிறது. ஹமாஸ் தரப்பில் 8,500 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே தான் இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் வரும் நாட்களில் பலி எண்ணிக்கை என்பது அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் மோதலை கைவிட்டு சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

Uttar Pradesh CM Yogi Adityanath praises Israel attacks on Gaza against Hamas

இந்தியாவை பொறுத்தமட்டில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை கண்டித்தார். அதேவேளையில் சுதந்திரமான பாலஸ்தீனம் அமைய இந்திய வெளியுறவுத்துறை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் குறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பொதுக்கூட்டத்தில் பேசியபோது யோகி ஆதித்யநாத் கூறியதாவது: ‛‛ஹனுமானின் கடாயுதத்தால் மட்டுமே தாலிபான்களை ஒழிக்க முடியும். இப்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் தாலிபானி மனநிலையை காசாவில் எப்படி நசுக்கி வருகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். '' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+