‛‛எப்படி நசுக்குறாங்க’’.. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை புகழ்ந்த யோகி ஆதித்யநாத்.. என்ன சொன்னார்?
லக்னோ: காசா மீதான இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தி வருவதை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டி பேசியுள்ளார். தாலிபானி மனநிலையை இஸ்ரேல் நசுக்குவதாக அவர் புகழ்ந்துள்ளார்.
கடந்த மாதம் அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர். 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர்.

மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் இறந்தனர். மேலும் 230 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர்.
இதையடுத்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி விட்டதாக கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். அதோடு காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் 4வது வாரமாக நீடித்து வருகிறது. ஹமாஸ் தரப்பில் 8,500 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே தான் இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் வரும் நாட்களில் பலி எண்ணிக்கை என்பது அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் மோதலை கைவிட்டு சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தியாவை பொறுத்தமட்டில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை கண்டித்தார். அதேவேளையில் சுதந்திரமான பாலஸ்தீனம் அமைய இந்திய வெளியுறவுத்துறை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் குறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பொதுக்கூட்டத்தில் பேசியபோது யோகி ஆதித்யநாத் கூறியதாவது: ‛‛ஹனுமானின் கடாயுதத்தால் மட்டுமே தாலிபான்களை ஒழிக்க முடியும். இப்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் தாலிபானி மனநிலையை காசாவில் எப்படி நசுக்கி வருகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். '' என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications