உத்தர பிரதேசத்தில் ''பல'' இடங்களில் மது, இறைச்சிகளை தடை செய்ய யோகி முடிவு.. எங்கு தெரியுமா?
உத்தர பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் மது மற்றும் இறைச்சிகளை தடை செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் மது மற்றும் இறைச்சிகளை தடை செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் தொடர்ந்து எடுத்து வரும் முடிவுகள் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய இளைஞர்கள் அதிக அளவில் என்கவுண்டர் செய்யப்படுவது, இஸ்லாமிய பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்காதது, இஸ்லாமிய பெயர்களை மாற்றுவது என்று பல மதம் சார்ந்த நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதன் ஒருபடியாக அங்கு சில இடங்களில் மது மற்றும் இறைச்சிகளை தடை செய்ய உள்ளார்.

பெயர் மாற்றம்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் மற்றும் பைசாபாத் நகரங்களின் பெயர்களை மாற்றினார். அலகாபாத், பிரயாக்ராஜ் என்று மாறியது. பைசாபாத் அயோத்யா என்று மாற இருக்கிறது. இன்னும் சில நகரங்களின் பெயர்களை மாற்றும் யோசனையில் இருக்கிறார்.

எங்கு செய்கிறார்
இந்த நிலையில் பல இடங்களில் மது, இறைச்சிகளை தடை செய்ய யோகி முடிவு செய்து இருக்கிறார். இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள். கோவில்கள் அதிகம் உள்ள இடங்களில் மது, இறைச்சிகளை தடை செய்ய முடிவெடுத்துள்ளனர். எங்கு எல்லாம் புனித தலங்கள் இருக்கிறதோ அங்கு எல்லாம் இந்த தடையை கொண்டு வர இருக்கிறார்கள்.

இரண்டு இடம்
அதன்படி முதல்கட்டமாக அயோத்தி மற்றும் மதுரா முழுக்க இந்த தடையை கொண்டு வர உள்ளனர். அதன்பின் மற்ற நகரங்களில் இந்த தடையை அமல்படுத்த உள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டமிட்டுள்ள நிலையில் மது, இறைச்சிகளை தடை செய்ய யோகி முடிவு செய்து இருக்கிறார்.

ஏற்கனவே மதுரா
ஏற்கனவே மதுராவில் சில இடங்களில் இந்த தடை அமலில் உள்ளது. தற்போது மதுரா முழுக்க இந்த தடையை கொண்டு வர முடிவெடுத்துள்ளனர். ராமருக்கு இந்த பழக்கங்கள் எல்லாம் பிடிக்காது என்பதால் இதை செய்வதாக அவர் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications