1 கோடி பேருக்கு இலவச ஸ்மார்ட் போன்,டேப்லெட் தரும் யோகி அரசு - ஆட்சியைத் தக்கவைக்க ஆயத்தம்
உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவ மாணவிகளுக்கு ஒருகோடி இலவச ஸ்மார்ட்போன், டேப்லெட் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இன்று தொடக்கி வைக்கிறார்.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஒரு கோடி இலவச டேப்லெட், ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இன்று தொடக்கி வைக்கிறார். சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இளைஞர்களைக் கவரும் வகையில் இலவச லேப்டாப் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார் யோகி ஆதித்யாநாத்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யாநாத் முதல்வராக உள்ளார். ஆட்சியைத் தக்கவைக்க பாஜக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

உத்தரபிரதேச தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க காங்கிரஸ் கட்சியும் களத்தில் குதித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கல்லூரி மாணவிகளுக்கு செல்போன், ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் யோகி ஆதித்யநாத், கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒருகோடி லேப்லேட், ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகளை அம்மாநில அரசு இன்று வழங்குகிறது. இதற்காக அம்மாநிலம் முழுவதும் உள்ள தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இன்று ஸ்மார்ட்போன்களையும், டேப்லெட்டுகளையும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்க இருக்கிறார். இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக 60 ஆயிரம் ஸ்மார்ட்போன்களும், 40 ஆயிரம் டேப்லெட்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.
இதற்காக முதல் கட்டமாக ரூ.2,035 கோடி செலவிடப்பட்டுள்ளது. தலா ரூ.10,740 விலையில் 10.50 லட்சம் செல்போன்களும், தலா ரூ.12,606 விலையில் 7.2 லட்சம் டேப்லெட்டுகளும் வாங்கப்பட்டு உள்ளன. ஐ.டிஐ., டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல் இறுதி ஆண்டு படிப்பு, மருத்துவ உயர்கல்வி இறுதியாண்டு, பி.டெக், எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தால் பலன் பெறுவார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications