நாய் குரைத்ததால் நின்றுப்போன காதல் திருமணம்.. உனக்கு என்னடா துரோகம் பண்ணுனேன்.. புலம்பும் மணமகன்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் காதலித்து கரம்பிடிக்க மணமேடை வரை சென்ற காதல் ஜோடிக்கு கடைசி நேரத்தில் திருமணம் நடக்கவில்லை. இதற்கு மணப்பெண் ஆசை ஆசையாக வளர்ந்த செல்ல நாய் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம்.. நம்புங்கள் அதுதான் உண்மை.. உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
அனைத்து காதல்களும் திருமணத்தில் இணைவது இல்லை. சில காதல்கள் பாதியிலேயே முறிந்து போகலாம். இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். இருப்பினும் விரும்பிய காதலன், விரும்பிய காதலியை பலரும் இப்போது கரம்பிடித்து வருகின்றனர்.

ஆனால் உத்தர பிரதேசத்தில் ஒரு விநோத சம்பவம் நடந்துள்ளது இன்னும் கொஞ்சம் நேரம் தான்.. காதலர்களாக இருக்கும் நாம் கணவன் - மனைவியாக மாறப்போகிறோம். வீட்டுக்கு தெரியாமல் சந்தித்த நாம் இனி ஒரே வீட்டில் வாழப்போகிறோம். அப்பா- அம்மா உள்பட உறவினர்களுக்கு தெரியாமல் பேசிய நாம் பக்கத்தில் இருந்து மணிக்கணக்கில் பேசலாம் என்ற பெரும் கனவில் காதலனும், காதலியும் திருமண மேடை ஏறினர்.
நகைக்கடை உரிமையாளர்
அந்த காதலனின் பெயர் சுமித் கேசர்வாணி. வயது 25. அந்த காதலியின் பெயர் தனு கேர்வாணி. வயது 19. இவர்கள் இருவரும் உத்தர பிரதேச மாநிலம்பதேபூர் மாவட்டம் காகா தாலுகாவை சேர்ந்தவர்கள். சுமித் நகைக்கடை நடத்தி வருகிறார். இருவரும் தங்களின் காதலை குடும்பத்தினரிடம் கூறினர். முதலில்எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அதன்பிறகு ஓகே கூறினர்.
திருமண சடங்கு
இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. கடந்த 19ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. மண்டபத்தில் சுமித் மற்றும் தனு முகத்தில் புன்னகை தழும்ப அமர்ந்து இருந்தனர். அவர்களை சுற்றி இருவரின் உறவினர்கள் கூடியிருந்தனர். திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்து வந்தது.
நாய் குரைத்தததால்...
அப்போது எமனாக வந்தது அந்த செல்ல நாய். மணமகள் தனு வீட்டில் ஆசையாக வளர்த்த செல்ல நாய் மண்டபத்தின் ஓரத்தில் கட்டப்பட்டு இருந்தது. அந்த நாய் திடீரென்று சத்தமாக குரைக்க தொடங்கியது. இது அங்கிருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. இதனால் மணமகன் சுமித் தரப்பு உறவினர்கள் அந்த நாயை அமைதிப்படுத்த முயன்றனர். அப்போது ஒருவரை நாய் கடித்தது.
கைக்கலப்பு
இதனால் அந்த நாயை மற்றவர்கள் தாக்கினர். இதுதான் திருமண விழாவில் பிரளயத்தை ஏற்படுத்தியது. எப்படி நாயை தாக்கலாம் என்று மணமகள் குடும்பத்தினர் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே சண்டை வெடித்தது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இருக்கைகளை தூக்கி தாக்கி கொண்டனர்.
நின்ற திருமணம்
இதனால் கல்யாண மண்டபம் போர்க்களமாக மாறியது. இந்த சண்டையில் மணமகள் வீட்டை சேர்ந்த ரிஷப் கேசர்வாணி, சுபம் குப்தா, சங்கீதா தேவி ஆகிய மூவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், ஒருவருக்குக் கையில் எலும்பு முறிவும் உண்டானது. மணமகன் தரப்பிலும் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. காதலனும் மணமகனுமான சுமித் ‛உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன்.. இப்படி என் திருமணத்தை நிறுத்தி விட்டியே' என நாயிடம் சொல்லாத குறையாக புலம்பி வருகிறார். மேலும் மணமகள் ஆசை ஆசையாக வளர்த்த நாயே அவரது திருமணம் நிற்க காரணமானது பேசும் பொருளாகி உள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications