"எங்களை.. எங்களை.." உபி போலீஸ் கண் முன் சுடப்பட்ட அடிக் அகமது.. சொன்ன கடைசி வார்த்தை என்ன தெரியுமா?
லக்னோ: உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது சுட்டுக்கொலை செய்யப்படும் முன் கடைசியாக சொன்ன வார்த்தைகள் என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த என்கவுண்டர் போலீஸ் என்கவுண்டர் என்று கூறப்பட்டு வரும் நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது கொலை செய்யப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட கிரிமினல் கேஸ்கள் உள்ளன. அவர் எம்பியாக இருந்தவர் என்றாலும் அரசியல் தாதா என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக் அகமது ஏற்கனவே கடத்தல் கேஸ், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கு, உமேஷ் பால் கொலை வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஆவார். இவர் பெரிய குற்றவாளி என்றாலும்.. சட்ட ரீதியாக அவருக்கு தண்டனை கொடுப்பதே சரியானது.
உமேஷ் பால் கொலை வழக்கு காரணமாக சிறையில் இருந்த அவரை மருத்துவ பரிசோதனை என்று கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அங்கே செய்தியாளர்கள் போல கெட்டப் போட்டு வந்தவர்கள் போலீசாருக்கு முன்னிலையில், கேமராவிற்கு முன்னே இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தி உள்ளனர். முதலில் அடிக் அகமதுவை சுட்டுவிட்டு அதன்பின் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இந்த கொலைக்கு முன் அடிக் கொடுத்த பேட்டியும் அவரின் கடைசி வார்த்தைகளும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியே வந்து கொண்டு இருந்த , செய்தியாளர் ஒருவர்.. நீங்கள் உங்கள் மகனின் இறுதிச்சடங்கிற்கு செல்லவில்லையா என்று கேட்டுள்ளார்.
எங்களை அனுமதிக்கவில்லை. எங்களை அவர்கள் கூட்டி செல்லவில்லை. அதனால் நாங்களும் செல்லவில்லை என்று, குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் அவர் சொன்ன கடைசி வார்த்தை.
அவருடைய சகோதரர் அஷ்ரஃப்.. நாங்கள் நல்ல இஸ்லாமியர்கள் என்று சொன்னதுதான் அவர் சொன்ன கடைசி வார்த்தை ஆகும்.
செய்தியாளர் சந்திப்பில் கேமராக்களுக்கு முன்னிலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதை பற்றி விசாரிக்க நீதி விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் இருவரின் கைகளும் விலங்கு மாட்டப்பட்டு இருந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு பேருமே படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தலைக்கு அருகே துப்பாக்கியை வைத்து இந்த கொலையை செய்துள்ளனர்.
பிரயாகராஜில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 வருடமாக அங்கே 13 நாட்களுக்கு 1 என்ற விகிதத்தில் என்கவுண்டர் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில்தான் சமீபத்தில் ஆடிக் அகமது மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த என்கவுண்டர் போலீஸ் என்கவுண்டர் என்று கூறப்பட்டு வரும் நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது கொலை செய்யப்பட்டு உள்ளார். மகனின் உடல் புதைக்கப்பட்டு இருக்கும் இடத்தில இருந்து 3 கிமீ தூரத்தில்தான் அப்பா சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications