Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆண்மையில்லை".. முதலிரவில் புதுப்பெண்ணுக்கு அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ‛‛கணவனுக்கு ஆண்மை தன்மை இல்லை. முதலிரவில் தான் இது தெரிந்தது. இனி அவருடன் வாழ முடியாது'' என்று திருமணமான 3 நாளிலேயே புதுப்பெண் விவாகரத்து கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே ஷாஜன்வா கிராமத்தை சேர்ந்த வசதியான தம்பதி வசிக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஒரெயொரு மகன் உள்ளார். அவர் கோரக்பூர் தொழில் மேம்பாட்டு வாரியத்தின் தொழில் பிரிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்

woman-seeks-divorce-3-days-after-her-marriage-in-uttar-pradesh

இதையடுத்து, பெண் பார்க்கும் பணி தொடங்கியது. இதையடுத்து 25 வயது பெண்ணுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நந்தது. அதன்பிறகு கடந்த நவம்பர் 28 ம் தேதி அவர்களின் திருமணம் பெலியாபார் என்ற ஊரில் நடந்தது.

இந்நிலையில் தான் முதலிரவு முடிந்த மறுநாள் மணப்பெண், தனது கணவரை விட்டு பிரிந்து சென்றார்.
அதன்பிறகு டிசம்பர் 1ம் தேதி புதுப்பெண்ணின் தந்தை அவரை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றார். திருமணம் முடிந்த 3வது நாளில் அவர்கள் சில சம்பிரதாய சடங்குகளை செய்ய வேண்டும். இதற்காக மணப்பெண்ணின் தந்தை சென்றார். அப்போது புதுப்பெண் தனது தந்தையை அழைத்து தனியாக பேசினார். அப்போது தனது கணவருக்கு ஆண்மை குறைப்பாடு இல்லை. அவர் திருமண வாழ்க்கைக்கு பொருத்தமற்றவர். நம்மை மாப்பிள்ளை வீட்டார் ஏமாற்றிவிட்டார் என்று கதறி அழுதார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மணமகன் குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல் தனது மகளை கையோடு வீட்டுக்கு அழைத்து சென்றார். இதற்கிடையே மனைவியை காணவில்லை என்று புதுமாப்பிள்ளை கூறினார். தந்தையும் மாயமாகி இருந்ததால் அவர் தான் அழைத்து சென்றதை உறுதி செய்தனர். மேலும் டிசம்பர் 3ம் தேதி மணமகன் -மணமகள் வீட்டார் சந்தித்து பேசினார்.

அப்போது புதுப்பெண்ணின் குடும்பத்தினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ‛‛மகனின் இயலாமையை மறைத்து திருமணம் செய்து வைத்து விட்டீர்கள்'' என்று குற்றம்சாட்டினார். ஆனால் அதனை ஏற்க மறுத்தனர். இதையடுத்து மணமகனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய இருகுடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். கோரக்பூரில் உள்ள மருத்துவ மையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் புதுமாப்பிள்ளையால் தந்தையாக முடியாது. அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது தெரியவந்தது.

இருப்பினும் மணமகனின் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். இந்த விவகாரம் போலீஸ் நிலையம் சென்றது. போலீசார் தலையீடு செய்தனர். இதையடுத்து மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை முறித்து கொள்ள ஓகே சொன்னார்கள். அதன்படி திருமணத்தின்போது மணப்பெண் தரப்பிடம் வாங்கிய ரூ.7 லட்சம் ரொக்கத்தை ஒரு மாதத்தில் வழங்குவதாக கூறினர். அதேபோல் அந்த பெண் தற்போது விவாகரத்து கோரி உள்ளார். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 3 நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+