Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாலியோ ஜிம்கானா.. 100 நாளில் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை! தேர்வு வாரியங்களுக்கு யோகி அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 100 நாட்களில் 10,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறையை துவங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்வு வாரியங்களின் தலைவர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் 18 இடங்களில் வென்றன.

இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அவர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தேர்வு வாரிய தலைவர்களுக்கு உத்தரவு

தேர்வு வாரிய தலைவர்களுக்கு உத்தரவு

இந்நிலையில் அவர் உத்தர பிரதேசத்தில் அரசு பணிகளுக்கான தேர்வு வாரிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்தவும், நிலுவை முறையை நீக்கி புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைந்து துவக்கவும் அறிவுறுத்தினார். மேலும், தேர்வுகள் நடத்துவதில் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக இருக்க வேண்டும். குறித்த காலக்கெடுவுக்குள் பணிகளை உரிய முறையில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொழில்நுட்பங்களை பயன்படுத்த

தொழில்நுட்பங்களை பயன்படுத்த

மேலும் அனைத்து தேர்வு வாரியங்கள் சார்பிலான ஆட்சேர்ப்பு தேர்வு நடைமுறைகள் உள்துறையுடன் விரைவில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார். அத்துடன் ஆட்சேர்ப்பு செயல்முறை காலநீட்டிப்பு செய்வதாக இருக்க கூடாது. தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். தேர்வு வாரியங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இது பணிகளை விரைவாக முடிக்க உதவும் என அறிவுறுத்தினார்.

100 நாளில் 10,000 பேருக்கு அரசு வேலை

100 நாளில் 10,000 பேருக்கு அரசு வேலை

மேலும் மாநிலத்தில் அடுத்த 100 நாட்களில் 10,000 க்கும் அதிகமானவர்களுக்கு மாநில அரசு பணி வழங்க வேண்டும். இதற்கான நடைமுறையை தேர்வு வாரியங்கள் உடனே துவங்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அடுத்த 100 நாட்களில், மாநிலத்தைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க அனைத்து சேவைகள் தேர்வு வாரியத்துக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். இதற்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும் அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் அதிகமாக இருந்தாலும் நிதி பற்றாக்குறையால் நிரப்பப்படாமல் உள்ளது என அவர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் யோகி ஆதித்யநாத் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+