அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு. உத்தர பிரதேச அரசு எடுத்த முக்கிய முடிவு.. கையெழுத்து போடும் யோகி
லக்னோ: தீபாவளி பண்டிகையையொட்டி உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு மெகா கிப்ட் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்தி வழங்கி அறிவிக்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். அங்கு அனைத்து தரப்பு மக்களுக்குமான நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளி கொண்டாட அனைத்து மக்களும் தயாராகி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் உத்தர பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு கிப்ட் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த அவர் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது 4 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அறிவிப்பு என்பது விரைவில் வெளியாக உள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான கோப்புகள் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளிக்கும் நிலையில் அது உடனடியாக அமலுக்கு வர உள்ளது. இதனால் அங்குள்ள அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் பட்சத்தில் பல லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
அதாவது மாநிலத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மேலும் தற்போது உயர்த்தப்படும் இந்த அகவிலைப்படி என்பது முன்தேதியிட்டு வழங்கப்படும். அதாவது ஜூலை 1ம் தேதி என்ற முன்தேதியிட்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதுதவிர அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அரசு சமீபத்தில் தனது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரித்தது. தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications