நகர்ப்புற வளர்ச்சி காலத்தின் தேவை! வல்லரசு இந்தியாவுக்கு இது முக்கியம்.. யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர், நகர்ப்புற வளர்ச்சி என்பது காலத்தின் தேவை என்றும், வல்லரசு இந்தியாவுக்கு இது முக்கியம் எனவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கோரக்பூரில் நேற்று ரூ.233.20 கோடியில் 303 வளர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், "இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவதற்கு நகர்ப்புற வளர்ச்சி என்பது அடிப்படையானது. இந்த நிகழ்ச்சியில் நான் 189 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அதேபோல 114 முடிவுற்ற திட்டங்களை தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்திருக்கிறேன். ஒரு நகரம் உருவாகிறது எனில் அங்கு திடக்கழிவு மேலாண்மை என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.

இந்த திடக்கழிவு மேலாண்மைக்கு ஏற்ப மக்கும் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க கோரக்பூர் நகராட்சி மற்றும் தேசிய அனல்மின் நிலையம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது எதிர்வரும் 25 ஆண்டுகளில் சுமார் ரூ.600 கோடியை இது நமக்கு மிச்சப்படுத்தும். ஒரு நகராட்சியின் வளர்ச்சிக்கு குப்பைகளை சரியாக கையாள்வது மிகவும் அவசியம். அதேபோல ஸ்மார்ட் சிட்டி எனும் கனவை நனவாக்குவதில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் கடந்த 6 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு விஷயத்தில் நாம் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. இதன் காரணமாக இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். இப்படி இருக்கையில் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்துவது அவசியமாக இருக்கிறது. அதற்கு நகர்ப்புற வளர்ச்சி முக்கியம். எனவே இந்த அரசு தற்போது அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications