காவலர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகள்! அசத்தும் உ.பி.. யோகி ஆதித்யநாத் பாராட்டு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஆயுதப்படை காவலர்களின் தியாகம் அளப்பரியது என முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்திருக்கிறார். மேலும் காவலர்களின் குழந்தைகள் சிறப்பான கல்வியை பெற 31 போலீஸ் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், மாநில ஆயுதப்படை காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், "கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலை முறியடித்ததில் மாநில ஆயுதப்படை காவல்துறையினருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அவர்களின் தியாகம்தான் இன்று மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கான காரணமாக இருக்கிறது. எனவே இவர்களின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் அந்த பணியை சிறப்பாக செய்துவருகிறோம்.
காவலர்களின் குழந்தைகள் சிறப்பான கல்வியை பெற 31 போலீஸ் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆயுதப்படையில் 41,893 கான்ஸ்டபிள்களையும் 698 படைப்பிரிவு கமாண்டோக்களையும் இந்த அரசு புதியதாக நியமித்திருக்கிறது. பிஏசியில் பதவி உயர்வுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்காக, ஆயுதப்படை போலீஸ் படையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கையை முறையே 184 மற்றும் 3,772 ஆக அரசு உயர்த்தியுள்ளது. காவல்துறையில் மற்ற பிரிவில் இருப்பவர்களை விட ஆயுதப்படையில்தான் பதவி உயர்வு விரைவில் வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications