பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்த உத்தரப் பிரதேசம்! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன எனவும் யோகி அதித்யநாத் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகின்றன. எனவே இந்த எண்ணிக்கையை குறைக்குமாறு மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநில அரசு இக்குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, தேசிய அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி வரை உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உத்தரப் பிரதேசம் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தீவிரமாக எதிர்வினையாற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை குறிப்பிட்டு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஐபிசி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை மாநில காவல்துறையினர் சிறப்பாக கையாண்டு அதற்கான தீர்வையும் விரைவில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இக்குற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டால் இதில் குற்றச்சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்வது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது. பாதிக்கப்பட்ட நபருக்கான பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவற்றை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications