போலீஸின் அதிரடிதான் குற்றங்களை குறைத்திருக்கிறது! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக உத்தரப் பிரதேசத்தை உருவாக்க யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இவர்கள் மீதான குற்றங்கள் குறைந்திருப்பதற்கு போலீஸின் அதிரடி நடவடிக்கைதான் காரணம் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது.

பாஜக யோகி ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதாவது யோகி பொறுப்பேற்ற 6 ஆண்டுகளில் சுமார் 10,713 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளதாகவும் அதில் 178 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் ஆட்சி அடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் "இந்த என்கவுன்ட்டர் காரணமாக தான் மாநிலத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் குறைந்திருக்கிறது. அதேபோல சமூக விரோதிகளிடமிருந்து சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநிலம் நவீனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு இடையூராக உள்ளவர்கள் மீது கடுமையான நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் தற்போது 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.
கடந்த ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் ஆகிய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி இந்த குற்றங்கள் குறைந்திருக்கின்றன. இதற்கு என்கவுன்ட்டர்கள்தான் முழு காரணம். தற்போது மாஃபியாக்கள் உயிருக்கு பயந்து காவல்துறையினரிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த மாநிலம் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக உருவாகி வருகிறது. இதற்கு காவல்துறையின் அதிரடி நடவடிக்கைதான் காரணம்" என்று கூறியுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications