சென்னை விமானங்களை தகர்ப்போம்.. 14 வயது பொடியனின் மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு!
Recommended Video

மதுரை: சென்னை செல்லும் விமானங்களை குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று மதுரை விமான நிலையத்துக்கு வந்த தொலைபேசி மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மதுரையிலிருந்து சென்னை செல்லும் விமானங்களை தகர்க்கப் போகிறோம். காலை 9.30 மணியிலிருந்து வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி னார்.

இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். விமான நிலையத்திற்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து விமான நிலையம், விமானங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.
[6 நாளில் 15 பச்சிளம் குழந்தைகள் மரணம்... காரணத்தை கண்டறிய அசாம் அரசு விசாரணைக்கு உத்தரவு!]
அதேசமயம், சென்னை செல்ல வரும் பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உடமைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

மறுபக்கம் யார் இந்த மிரட்டலை விடுத்தது என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டது. அந்த விசாரணையில் மேல அனுப்பானடியைச் சேர்ந்த 14 வயதேயானா பிரகதீஷ் என்ற சிறுவன்தான் மிரட்டல் விடுத்தது என்று தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் விளையாட்டுக்காக மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் குழப்பம் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சொல்லவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டியது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 18 மணி நேரம் தாமதத்துக்குப் பின் இன்று காலை 9.30 மணியளவில் மணியளவில் 60 பயணிகளுடன் இலங்கை புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications