6 நாளில் 15 பச்சிளம் குழந்தைகள் மரணம்... காரணத்தை கண்டறிய அசாம் அரசு விசாரணைக்கு உத்தரவு!
கௌஹாத்தி : அசாமின் ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நவம்பர் 1 முதல் 6ம் தேதி வரையில் மட்டும் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் என்ன என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ளது ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் தான் நவம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குழந்தைகள் மரணம் குறித்து அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சௌரவ்பர்காகோடி கூறுகையில் "சில சமயங்களில் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான நோயாளிகள் வந்து அனுமதிக்கப்படுவர். உயிரிழந்த குழந்தைகள் பிறப்பதற்கு முன்னர் கர்ப்பிணிப் பெண்கள் எந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளத. பிரசவ வலி வந்த பிறகு சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்திருக்க மாட்டார்கள், அல்லது குழந்தைகள் குறைவான எடையுடன் பிறந்திருக்கும் உள்ளிட்ட காரணங்களும் இருக்கின்றன என்றார்.
141 படுக்கை வசதி மட்டுமே கொண்ட மருத்துவமனையில் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர்க்க முடியாத சூழல்களில் குழந்தைகளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியதாகிவிடுகிறது. எனினும் 15 குழந்தைகள் மரணத்திற்கான காரணம் என்ன என்று விசாரிக்க 6 நபர் கொண்ட தனி விசாரணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக பர்காகோடி கூறியுள்ளார்.
எனினும் மருத்துவமனை சரியான அளவில் சிகிச்சை அளிக்காததே பச்சிளம் குழந்தைகள் மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. எனவே மாநில அரசும் தனியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, யுனிசெஃப்-ன் மருத்துவ கல்வி இயக்குனர், கௌத்தி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் மற்றும் அசாம் மருத்துவக்கல்லூர மருத்துவமனையின் மருத்துவர்களை உள்ளடக்கிய குழு குழந்தைகள் இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து அளிக்கை அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications