வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளனர். சில விஷயங்கள் வரவேற்பையும், சில விஷயங்கள் சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கான மனுக்களை சமர்பிப்பதற்கு, தலைமை செயலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இனி உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தலைமை செயலகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தவெக அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வருகை புரியும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தின் வெளிப்புறத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி தலைமைச் செயலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

புகார் பெட்டி.. அனுமதிக்கு கட்டுப்பாடு
இதுகுறித்து தலைமைச் செயலகம் அதிகாரிகள் கூறுகையில், "முதலமைச்சரின் தனிப்பிரிவு வளாகம் தலைமைச் செயலகத்திற்குள் இருக்கிறது. திமுக, அதிமுக ஆட்சியில் மக்கள் அங்கு நேரடியாக சென்று புகார் அளித்து வந்தனர். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரடியாக வந்து புகாரளிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தலைமைச் செயலகத்தில் தினசரி கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். எனவே முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வருவோர், தங்களின் மனுக்களை சமர்ப்பிப்பதற்காக தலைமைச் செயலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வராமல் அந்தப் புகார் பெட்டியிலேயே புகார்களை சமர்ப்பிக்கலாம். இதன்மூலம் தலைமைச் செயலகத்திற்குள் வரும் கூட்டத்தையும் கணிசமாக குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications