மதுரை சித்திரை திருவிழா: வைகையாற்றில் கூட்ட நெரிசல்.. இருவர் பலி.. 11 பேர் காயம்
மதுரை: மதுரை வைகையாற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலால் மதுரையில் உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள கடந்த இரு ஆண்டுகளாக அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த வைபவத்தை பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் காண்பதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் நடைபெற்றன.
இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து சித்திரை திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.

சித்திரை திருவிழா
பொதுவாக இந்த சித்திரை திருவிழாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வந்த கள்ளழகரை பார்க்க வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்து வருவதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அழகர் வைபவத்தை காணும் போது சிலர் முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.

இருவர் பலி
இந்த நிலையில் மூச்சுத்திணறலால் ஒரு பெண் உள்பட இருவர் உயிரிழந்துவிட்டனர். அது போல் மேலும் 11 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்குரியதாக இருப்பதாக தெரிகிறது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெறுகின்றன. இருவரது உடல்களும் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

அடையாளம் காணும் பணிகள்
இறந்தவர்களின் புகைப்படத்தை சமூகவலைதளங்களிலும் அரசு இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என தெரியவந்தது. இன்னொருவர் மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த 65 வயதாகும் ஜெயலட்சுமி என்பது தெரியவந்தது. மூச்சுத்திணறலால் அவர்கள் இருவரும் தவித்த போது ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர்வதற்கு கூட வழியில்லாத நிலையில் இருந்ததால் இருவரும் சிகிச்சை கொடுப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

உதவி எண்
வைகையாற்றில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் நிலையை அறிய 94980 42434 என்ற உதவி எண்ணில் கொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வைகையாற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும் பக்தர்கள் இறங்கியதால இந்த நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இரு ஆண்டுகளுக்கு பிறகு அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காணலாம் என ஆசையாக வந்த நிலையில் இப்படியொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications