பிஎப் பணம்.. வருங்கால வைப்பு நிதி தொடர்பாக பிரச்சனையை தீர்க்க 27ம் தேதி சூப்பர் வாய்ப்பு
மதுரை: வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்று இ.பி.எப்.ஓ. குறித்த சந்தேகம் மற்றும் குறைகளை தீர்க்கலாம்.. பிஎப் அதிகாரிகளை நேரடியாகவே சந்தித்து உங்களை குறைகள் குறித்து முறையிட முடியும். இதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மதுரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதன் மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில், நிதி உங்கள் அருகில் மற்றும் இ.எஸ்.ஐ.சி. சுவிதா சமகம் இணைந்து நடத்தும் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் அமீயாகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இந்த முகாம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்கும் இ.பி.எப்.ஓ. குறித்து குறைகளை தீர்க்க t.Ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவுசெய்த பின்னர் இக்கூட்டத்தில் பங்கேற்கலாம். இந்த முகாம் மதுரையில் பழங்காநத்தம் இ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகத்திலும், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்தில் அந்தந்த இ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகங்களிலும் நடைபெறுகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான 2023-2024ம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கு விவர அறிக்கையை சந்தாதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2023- 2024ம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்திர கணக்கு விவர அறிக்கை, தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலக வலைதளம் (http: // cag.gov.in / ae / tamil-nadu/en )-ல் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள், சந்தாதாரர்கள் கணக்கு விவர அறிக்கையை தங்கள் இணையதள பக்கத்தில் உள்நுழைந்து '' online services - want to know your GPF status '' மெனுவின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அலுவலக வலைதளத்தில் தங்களின் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications