பிஎப் பணம்.. வருங்கால வைப்பு நிதி தொடர்பாக பிரச்சனையை தீர்க்க 27ம் தேதி சூப்பர் வாய்ப்பு
மதுரை: வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்று இ.பி.எப்.ஓ. குறித்த சந்தேகம் மற்றும் குறைகளை தீர்க்கலாம்.. பிஎப் அதிகாரிகளை நேரடியாகவே சந்தித்து உங்களை குறைகள் குறித்து முறையிட முடியும். இதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மதுரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதன் மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில், நிதி உங்கள் அருகில் மற்றும் இ.எஸ்.ஐ.சி. சுவிதா சமகம் இணைந்து நடத்தும் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் அமீயாகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இந்த முகாம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்கும் இ.பி.எப்.ஓ. குறித்து குறைகளை தீர்க்க t.Ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவுசெய்த பின்னர் இக்கூட்டத்தில் பங்கேற்கலாம். இந்த முகாம் மதுரையில் பழங்காநத்தம் இ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகத்திலும், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்தில் அந்தந்த இ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகங்களிலும் நடைபெறுகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான 2023-2024ம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கு விவர அறிக்கையை சந்தாதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2023- 2024ம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்திர கணக்கு விவர அறிக்கை, தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலக வலைதளம் (http: // cag.gov.in / ae / tamil-nadu/en )-ல் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள், சந்தாதாரர்கள் கணக்கு விவர அறிக்கையை தங்கள் இணையதள பக்கத்தில் உள்நுழைந்து '' online services - want to know your GPF status '' மெனுவின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அலுவலக வலைதளத்தில் தங்களின் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications