Exclusive: அதிமுகவில் சசிகலா..? ஓபிஎஸ் நிலைப்பாட்டிற்கு செல்லூர் ராஜூ ஆதரவு..!
மதுரை: சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ். பொறுப்புடன் பதில் அளித்திருப்பதாக கூறுகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசுபவரல்ல என செல்லூர் ராஜூ ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக நம்மிடம் மனம் திறந்து அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு;

பொறுப்புடன் பதில்
''அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சசிகலா குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பி.எஸ். பொறுப்புடன் பதில் அளித்தார். சசிகலாவை சேர்ப்பது குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறியதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு கட்சிக்கு தலைவராக விளங்கக்கூடியவர் இப்படித்தானே பதில் சொல்ல வேண்டும், நீங்களே சொல்லுங்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசினால் அது சரியாக இருக்குமா.''

ஆயிரம் பேர்
''ஓ.பி.எஸ்.சை பொறுத்தவரை எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசமாட்டார். ஜெயக்குமார் பேட்டி குறித்து எனக்குத் தெரியாது, நான் பார்க்காததால் அது குறித்து பேச விரும்பவில்லை. அதிமுக ஜனநாயக இயக்கம், ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். சசிகலா அரசியல் செய்ய விரும்புகிறார், அது அவரது விருப்பம். அதனால் அவரது சுற்றுப்பயணம் குறித்து நான் எப்படி கருத்துச் சொல்ல முடியும். ஜனநாயக நாட்டில் தம்பி நீங்க நினைத்தால் கூட ஒரு அரசியல் கட்சியை தொடங்கலாம். இதனால் இதற்கெல்லாம் கருத்துக் கூறுவது முறையாக இருக்காது.''

தலைமை பண்பு
''ஓ.பன்னீர்செல்வம் ஒரு தலைவருக்குரிய பண்புடன் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனால் யாருக்கு என்ன வந்துவிட்டது'' என ஒ.பி.எஸ்.ஸை விட்டுக் கொடுக்காமலேயே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். இதனிடையே, கே.பி.முனுசாமி குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜூ பதிலளிக்க மறுத்துவிட்டார். சசிகலா விவகாரத்தை மையமாக வைத்து அதிமுக மேல்மட்ட நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துக்களால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

கட்சியில் பூகம்பம்
இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டர்களை நம்பித் தான் அதிமுக என்றும் கட்சியில் மாற்றம் அவசியம் எனவும் கூறி புயலை கிளப்பியிருந்தார் செல்லூர் ராஜூ என்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் அதிமுகவில் பூகம்பம் வெடித்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications