சிக்கலை ஏற்படுத்தும் CCTV..திமுக அரசு தான் காரணம்! ’இப்படி’தான் செய்ய வேண்டும்..டாக்டர் சரவணன் பகீர்
மதுரை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி திடீர் திடீரென செயல் இழப்பது பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சிசிடிவி பழுது குறைபாட்டுக்கு தமிழ்நாடு அரசே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.
உதகை, ஈரோட்டைத் தொடர்ந்து தென்காசி தொகுதியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகியுள்ளன. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் 99 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததாக புகார் எழுந்துள்ளது.

நேற்று தென்காசியில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியதால் 99 சிசிடிவி கேமராக்களும் பழுதானதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக அந்த தொகுதியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் புகார் அளித்தார்.
சிசிடிவி பழுது: இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும் சிசிடிவி கேமராக்கள் பழுது சரி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை 24 மணி நேரமும் கண்காணிப்பட்டு வருவதாகவும், அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஸ்ட்ராங்க் ரூம்களில் சிசிடிவி பழுதானது அரசியல் கட்சியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்னர் இப்படி நடக்காத நிலையில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சந்தேகத்தை எழுப்புவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டாக்டர் சரவணன்: இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏற்படும் குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் கூறியுள்ளார். இது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்,” தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. உள்ளூர் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். மத்திய அரசு பாதுகாப்புக்காக துணை ராணுவ படையை மட்டுமே கொடுத்திருக்கிறது.
மாநில அரசே பொறுப்பு: ஆனால் அங்கு சிசிடிவி மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசே பார்த்துக் கொள்கிறது. மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றுபவர்கள் தான். எனவே ஷார்ட் சர்க்யூட் மற்றும் மின் பிரச்சினைகள் காரணமாக சிசிடிவி கேமரா பழுது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு மாநில அரசு தான் காரணம். வேண்டும் என்றே சில இடங்களில் மின்தடைகளை ஏற்படுத்துவதாக புகார் வந்துள்ளது. பவர் கட் செய்ததால் ஆட்சியை இழந்த கட்சி திமுக என்பதை மறந்து விடக் கூடாது.
பவர் கட்: மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் போதே சென்னையில் பவர் கட் செய்தது திமுக அரசு தான். அவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்தடையை ஏற்படுத்துவது பெரிய விஷயம் இல்லை. அதே நேரத்தில் வெளியில் இருந்து வாக்கு பதிவு இயந்திரங்களில் எந்த குளறுபடியும் செய்ய முடியாது. அது ஒரு கால்குலேட்டர் போல.. அதே நேரத்தில் உள்ளே செல்லும்போது அதில் மாறுதல்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே எண்ணிக்கை மையங்களில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
உரிய வசதிகள்: கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளுக்கும் உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை.. அவர்களுக்கு குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். அது மட்டும் இல்லாமல் இது போன்ற குளறுபடிகள் நடந்திருந்தால் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு பதிவு இயந்திரங்களை பதிவான வாக்குகளோடு வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ண வேண்டி வரும்” எனக் கூறினார்.
-
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்! -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications