பிரேமலதா விஜயகாந்த் உடன் அதிமுக முக்கிய புள்ளி சந்திப்பு.. கூட்டணிக்கு அஸ்திவாரம்?
மதுரை: மதுரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துள்ளார். தேமுதிகவின் பூத் முகவர்கள் கூட்டம் நடக்கும் தனியார் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'இல்லம் தேடி, உள்ளம் நாடி' என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ அந்த கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். இதை நான் உறுதியாக சொல்கிறேன். இங்கு உள்ளவர்கள் எம்எல்ஏ ஆகலாம். கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி வருகிறார்.
தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்பதை கணிக்க முடியாது. தேர்தல் முடிவுக்கு பிறகு எதுவும் நடக்கலாம். 2026-ல் கூட்டணி அமைச்சரவை அமையவே நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர். எல்லாக் கட்சியும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை தேமுதிக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் மண்டபத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி தொடர்பாக ஆர்.பி உதயகுமார் பேசினாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications