மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலை பள்ளியில், முன்னாள் மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு கோலாகலம்!
மதுரை: மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 1974 - 75 கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நேற்று சிறப்பாக நடைபெற்றது.
நமது நாட்டில் உள்ள பழமையான பள்ளிகளில் ஒன்று தான் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி.. மதுரையில் உள்ள இப்பள்ளி பிரிட்டிஷ் காலத்தில் நிறுவப்பட்டது.

இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலரும் பின்னாட்களில் தலைசிறந்த ஆளுமையாக மாறியுள்ளனர். விளையாட்டு துறையில் சிறந்த ஆளுமைகளை உருவாக்கிய பள்ளியாக இது இருக்கிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: இதற்கிடையே இந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 1974 - 75 ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நேற்று மே 18ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் Rev.Dr.R. ராஜா ஸ்டாலின் முன்னிலையில், தலைமை ஆசிரியை M. ஜேனோவா ஏவாஞ்சலின் தலைமையில் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டார்கள். தங்கள் பள்ளி காலத்து நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர்கள், பள்ளி காலத்தில் நடந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர் D. பால் கிறிஸ்டோபர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் S. சங்கரலிங்கம், V. ராதாகிருஷ்ணன், C. ரமேஷ், A.K.பஷீர் அஹமத் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.












Click it and Unblock the Notifications