விடாத தமிழக போலீஸ்! மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு! பரபரப்பு -முற்றும் மோதல்
மதுரை: ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் சோதனையின்போது பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு இருந்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கூறியுள்ளார்.

மேலும் விசாரணையை நடத்தாமல் இருக்க ரூ.3 கோடி லஞ்சம் கேட்டார். இதனை கொடுக்க சுரேஷ் பாபு மறுத்தார். இதையடுத்து ரூ.51 லட்சமாக லஞ்சப்பணம் குறைக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் அங்கித் திவாரியிடம் வழங்கப்பட்டது.
இதையடுத்து 2வது கட்டமாக கடந்த 1ம் தேதி அங்கித் திவாரி ரூ.20 லட்சத்தை சுரேஷ் பாபுவிடம் வாங்கினார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள அங்கித் திவாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
லஞ்சம் வாங்கி மாட்டிய அமலாக்கத்துறை அதிகாரி.. ஜாமீன் தள்ளுபடி? உயர்நீதிமன்றம் தீர்ப்பு
முன்னதாக அங்கித் திவாரி பணியாற்றி வரும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடாமல் சோதனையிட்டனர். விடியவிடிய 15 மணிநேரம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த அமலாக்கத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததை திமுகவின் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதேபோல் அமலாக்கத்துறையில் நுழைந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டதை பாஜகவினர் கண்டித்தனர். இதனால் இது விவாதமானது.
வசமாய் சிக்கிய ED அதிகாரி அங்கித் திவாரி.. 3 லேப்டாப்கள் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
இந்நிலையில் தான் மதுரை தல்லாகுளம் போலீசார் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஎஸ்பி சார்பில் மதுரை தல்லாகுளம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நாளிலேயே தமிழக போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் இடையே மோதல் போக்கு என்பது இருந்தது. இந்நிலையில் தான் தற்போது சோதனையின்போது பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறையினர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த மோதல் என்பது இன்னும் முற்றலாம் என கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications