வசமாய் சிக்கிய ED அதிகாரி அங்கித் திவாரி.. 3 லேப்டாப்கள் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
மதுரை: ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்திய நிலையில் அங்கித் திவாரியின் 3 மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் சுரேஷ் பாபு. இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தான் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அங்கித் திவாரி என்பவர் சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் உங்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷ் பாபு விசாரணைக்கு சென்ற நிலையில் அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார் அங்கித் திவாரி.
அதாவது அவர் மீதான விசாரணையை கைவிட ரூ.3 கோடி தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு சுரேஷ் பாபு மறுத்துள்ளார். இதையடுத்து லஞ்சப்பணம் குறைத்து கொள்ளப்பட்டுள்ளது. அதாவது ரூ.51 லட்சத்தை தந்தால் வழக்கு விசாரணையை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக ரூ.20 லட்சத்தை சுரேஷ் பாபு, அங்கித் திவாரியிடம் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள பணத்தை கேட்டு அங்கித் திவாரி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். அதாவது பிற அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். இதனால் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை தர வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிவுரையில் சுரேஷ் பாபு நேற்று ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் நேற்று வழங்கினார். அந்த பணத்தை அங்கித் திவாரி வாங்கி கொண்டு நேற்று மதுரை புறப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது கார் மற்றும் ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கித் திவாரியிடம் 15 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தான் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வீடு மற்றும் அவர் பணியாற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
மதுரையில் உள்ள அவரது வீட்டில் சில மணிநேரம் சோதனைகள் நடந்தது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 7 மணி வரை 13 மணிநேரம் சோதனை நடந்தது. இந்த வேளையில் பல ஆவணங்கள் சிக்கி உள்ளனர். குறிப்பாக இந்த சோதனைகளின்போது அங்கித் திவாரியின் 3 லேப்டாப்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த லேப்டாப்களை ஆய்வு செய்தால் இன்னும் சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் நம்புகின்றனர்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications